வெளிக்காற்றும், உள்காற்றும் சேர்க்கக்கூடிய இடம் புருவமத்தி. அந்த இடத்தில் சேர்த்தால்தான் காற்று ஒடுங்கும். அப்படி ஒடுங்கினால்தான் விகாரம் அற்றுப்போகும். இதை மகான் அகத்தியர்,
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
- மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் - கவி எண் 86.
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
- மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் - கவி எண் 86.
.
பெட்டி என்பது வயிறு. வயிற்றில் உணவு எதுவும் இருக்கக்கூடாது. கால் வயிறு அளவுதான் உணவு இருக்கவேண்டும். அளந்துதான் சாப்பிட வேண்டும். பத்மாசனம் இட்டு, ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதனை - பாம்பு என்றால் கருஞ்சாரை, வெஞ்சாரை. அல்லது இடகலையையும் பிங்கலையையும் சேர்ப்பது எனப்படும். அப்படி அடைத்து வைக்கின்ற காற்று என்ன செய்யும்?
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் - ஆக அந்தக்காற்றை எப்படி ஆட்டுவது? அந்தக்காற்றை எப்படி இலயப்படுத்துவது? அந்தக்காற்றை எப்படி ஸ்தம்பிப்பது? எப்படி புருவ மத்தியில் செலுத்துவது? என்பது தெரியாது. எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் - எட்டு என்பது அகாரம். இரண்டு என்பது உகாரம்.
கண்டஸ்தானத்தில் இருக்கும் காற்றையும், வெளிக்காற்றையும் சேர்க்க வேண்டும். இது நம்மால் முடியாது. தலைவன் ஆசி இருக்க வேண்டும். வெளிக்காற்று - பரமாத்மா, உள்காற்று - ஜீவாத்மா. இந்த உள்காற்றையும், வெளிக்காற்றையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தினால் அது என்னாகும்? வெளியே போகமுடியாது. இதை ஆசான் நயமாக சொல்லுவார், வெளிக்காற்று, உள்காற்று இரண்டையும் சேர்த்து ஆட்டினாக்கால் இருபுறமும் ஆடிவர எதிரேயேறுங் - வேறு வழியே இல்லாமல் மேலே போய்விடும். கட்டினுக்குள் நில்லாது சிரசிலேறும் - அதற்கு வேறு வழியேயில்லை சிரசில் ஏறும்.
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
என்றார். எதற்கு ஆசான் அகத்தீசரும், மகான் திருவள்ளுவரும் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லுகிறார்கள்? ஆக இப்படித்தான் யோகிகள் செய்திருக்கிறார்கள். இப்படி ஆசானின் ஆசி பெற தினம் தினம் பூஜை செய்ய வேண்டும். பிராணாயாமம் செய்கிறவர்கள் உணவு அரை வயிறாக சாப்பிட வேண்டும்.
பாசிப்பயிறு, பச்சரிசி, பழங்கள் சேர்க்க வேண்டும். பசு நெய் சேர்க்க வேண்டும். முறையோடு பிராணாயாமம் செய்து, ஆசான் ஆசி பெறவேண்டும். ஆக ஞான சித்தர் காலம் வருவதால் இந்தக்கருத்துக்கள் ஊரெங்கும், உலகெங்கும் பரவவேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் மரணத்தை வெல்லலாம், ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நச்சுத்தேகமாகிய விஷதேகத்தை வீழ்த்தலாம். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நமது அந்திமக்காலத்தில் கட்டக்கூடிய கபத்தை இப்போதே அறுத்து எடுத்துவிடலாம்.
அருமையான தொண்டு
ReplyDelete