உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது? மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.
ஆசான் பட்டினத்தார் காஞ்சிபுரத்தில் இருந்தார். அவரைப் பார்க்க ஒருத்தன் வந்தான். இவரது எளிமையைப் பார்த்து இவரெல்லாம் சாமியாரா என்று சொல்லிவிட்டான். அவர் கூட இருந்தவர்கள் எல்லாம் என்ன உங்களை இப்படி பேசுகிறான் என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அவன் கோட்டான் மாதிரி”என்றார்.
கூகை என்றால் கோட்டான். பகலில் அதற்கு கண் தெரியாது. ஆனால் பிரம்மாண்டமான சூரியன் பகலில் இருக்கு. ஆனால் கோட்டானுக்கு மட்டும் பகலில் கண் தெரியாது. இதை ஆசான் பட்டினத்தார் சொல்வார்.
பொல்லா இருளகற்றும் - அமாவாசை இருட்டு போல இருக்கும். ரொம்ப காரிருள் என்பார்கள். மழை மேகம் மூடியிருந்தால் காரிருளாக இருக்கும். அப்ப சூரியன் வந்தவுடன் வெளிச்சமாகிவிடும்.
பொல்லா இருளகற்றும் கதிர் - கதிர் என்றால் சூரியன். கூகையின் புண்கண்ணிற்கு - இந்த கோட்டானுக்கு பகலில் இருட்டாக இருக்கு என்று சொன்னார். அதுபோல உண்மை ஞானிகளான எங்களை கண்டுபிடிக்க முடியாது.
மேலும் ஆசான் பட்டினத்தார் சொல்லிலும் தெரிந்து கொள்ளலாம் என்பார்.
பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.
இப்படியும் காஞ்சிபுரத்தில் பேசியிருக்கிறார் ஆசான் பட்டினத்தார். அப்போ அடிப்படை என்னவென்றால் ஞானிகளை சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்களுடைய பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்பார்.
பொருளுடையோரைச் செயலிலும் - நிறைய பொருளிருந்தது என்றால் வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான். அதிலிருந்து அவனிடம் நிறைய பணம் இருக்குதென்று தெரிந்து கொள்ளலாம்.
வீரரைப் போர்க்களத்தும் - வீரமுள்ளவனை எங்கே பார்க்க வேண்டும்.போர்க்களத்தில் பார்க்க வேண்டும். இங்கே வாய்சவடால் அடிப்பான். போர்க்களத்தில் அவனவன் தலை உருண்டுக்கிட்டே இருக்கும். அங்கே போகும்போது பயந்துவிடுவான்.
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் – ஒருவனை பார்க்கும்போதே மிகத்திறமையான ஆள் என்று சொல்லிவிடுவார்கள்.
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில் இருளறு சொல்லிலுங் காணத்தகும் - ஞானிகள் தன்னுடைய பேச்சில் ஒருவனுக்கு மாயையை உண்டுபண்ண மாட்டார்கள். அவனுக்கு தெளிவான பாதையை காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஞானியை பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசான் பட்டினத்தார் சொல்வார்.
அவர் பேச்சு அத்தனையும் மனிதகுலத்துக்கு ஒளிவிளக்காக இருக்கும். அப்படி பேசுபவரைதான் கண்டுபிடிக்க வேண்டும். ஞானிகளை அப்படித்தான் அடையாளம் காட்டுவார் ஆசான் பட்டினத்தார். ஒருவனுடைய பேச்சு மற்றவனை மடையனாக்கும்படி இருந்தால் அவன் அருளில்லாதவன். ஆனால் ஞானிகள் பேச்சு தெளிவாக இருக்கும். இதுதான் மார்க்கம். இதைக் கடைப்பிடி என்று சொல்வார்கள்
No comments:
Post a Comment