Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 26 August 2018

ஓம் அகத்தீசாய நம”



என்னுடைய பேர்ச்சொல்லில் கூட்டிக்கொண்டு 
இசைவான பொதிகையிலே யேறுவார்பார் 
உன்னுடைய திறங்கண்ட போதுதானே 
யுறுதியுள்ள சித்தனென்று பேருமீய்வேன் 
மின்னுடைய வொளிக்காட்டி யுறுதலமுங்காட்டி 
மெய்ஞ்ஞான வீடுபெற நிலையுங்காட்டி
பன்னுடைய சிதம்பரமு மேருபூசைப்
பாவிப்போ மஷ்டாங்கம் பரிந்துகாணே.

-அகத்தியர் பூரண சூத்திரம் 216

ஆசான் அகத்தியர் சொல்கிறார் என்னுடைய நாமத்தை சொன்னால் பொதிகை மலையாகிய புருவமத்திக்கு செல்லமுடியும். உன்னுடைய திறமையை அறிந்த பின்புதான் உன்னை சித்தன் என்று சொல்வேன் என்கிறார். அகத்தீசன் நாமத்தை சொல்ல சொல்ல நாம் அறியமுடியாத ஒன்றை பற்றி அறிய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே வீடுபேறு அடையவும் உண்மை ஆன்மீகத்தை அறியவும் உதவுகிறது.


காலை எழும் போதே “ஓம் அகத்தீசாய நம” என்று அகத்தியர் நாமங்களை நாமஜெபமாக சொல்லிக் கொண்டே எழுந்திரித்தால் நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசிகளைப் பெற்று மனஅமைதியான வாழ்வை பெற்று, மனஅமைதியுடன் வாழ்வார்கள்.

ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.


No comments:

Post a Comment