முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம்.
மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம். மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம்.
மன அழுத்தமும், மனக்குழப்பமும், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது.
ஜென்மஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப்பொடியாக்கும் முருகப்பெருமான் திருவடி கருணையால் தான் பாவங்கள் நீங்கும், பாவவினைகள் நீங்கினால் மனக்குழப்பமும் மனஅழுத்தமும் தானே நீங்கும், பிரச்சனைகளும் ஏதும் வராது என்பதையும் அறியலாம்.
உலகினில் பிறந்த அனைவரும் அனைவரையும் சந்திப்பதும் இல்லை, நட்பு கொள்வதும் இல்லை, பகை கொள்வதும் இல்லை, முன்ஜென்ம தொடர்புடையவர்களைத்தான் இச்சென்மத்திலும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள்.
முன்ஜென்மத்திலே செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் வாழ்வு அமைகிறது.
ஆதலினாலே பணிபுரியும் இடத்தில் வேலையில், உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருகிறது என்றால் அது நாம் பிறருக்கு முன்ஜென்மத்தில் செய்த இடையூறே, இப்படி இந்த ஜென்மத்தில் வந்துள்ளது என்பதை அறியலாம்.
குடும்பத்திலே பிரச்சனைகள் வருவதும் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவமே. கடன் சுமை வருவதும் முன்ஜென்ம பாவமே. இப்படி மனிதன் வாழும் வாழ்வு முழுக்க பாவத்தினால் பிரச்சனைகளும் புண்ணியத்தால் நன்மைகளும் உண்டாகின்றதை அறியலாம்.
பிரச்சனைகளாலும், பிறர் நமக்கு செய்யும் இடையூறுகளாலும், நமது இயலாமையினாலும், பகையினாலும், வஞ்சத்தினாலும், ஏமாற்றத்தினாலும் மனஅழுத்தமும் மனஅமைதியின்மையும் வரத்தான் செய்யும்.
இவையெல்லாம் தீர்க்க, எல்லாம்வல்ல முருகனது திருவடியே கதியென சரணாகதி அடைந்து முருகநாமங்களை சொன்னால் முருகனது அருளால் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல அனைத்தும் விலகிடும் என்பதையும் அறியலாம்.
No comments:
Post a Comment