Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 10 December 2016

பஞ்சமாபாதகங்களிருந்து விடுபட வேலனை வணங்குங்கள்!

முருகா என்றால் :


கள், காமம், களவு, கொலை, பொய்கூறல் என்ற ஐந்து பெருங்குற்றங்களும் பஞ்சமாபாதகங்கள் என்றும் இப்பாவங்களை செய்திட்டால் அது மனிதனை விடுபடமுடியாத வகையினிலே நரகத்தில் தள்ளிவிடும் என்பதையும் உணர்த்துவார்.



இந்த பஞ்சமாபாதகங்களும் அவரவர் முன் ஜென்மங்களிலே அவரவர் செய்திட்ட பாவங்களினாலேதான் இச்சென்மத்திலும் தொடர்கின்றதென்றும் அவை அவை அவரவர் செய்திட்ட பாவத்தினால் இச்சென்மத்திலும் தொடர்ந்து அவர் தம்மை மீண்டும் மீண்டும் மீளா நரகத்தில் ஆழ்த்திட முயற்சிக்கின்றது. ஆதலின் பாவவினைக்கு உட்பட்டவர்கள் முருகனருளால் உணர்ந்து மீண்டும் பாவத்தின் போக்கில் செல்லாமல் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற உண்மை அறிவும் மிகும்.



முன்சென்மங்களிலே யாரும் அறியவில்லை என்றே நம்மை நாமே வியந்து ஏமாற்றிக் கொண்டு பிறர் அறியா வண்ணம் இரகசியமாக அவர்களது பொருளை கவர்தல், பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி வஞ்சித்தல், பொருள் பறித்தல், அதிகவிலை உள்ள பொருளையோ, நிலத்தையோ, பிறர் வறுமையைப் பயன்படுத்தி தர்மத்திற்கு புறம்பான வழியிலே சென்று அவர்தம் பலகீனமான சூழ்நிலையை தக்க சந்தர்ப்பமாக எண்ணி பயன்படுத்தி வஞ்சனை செய்து சொத்தை அபகரித்தல், பொருளை அபகரித்தல் என்றும் தமக்கு உள்ள சக்தி, பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி பிறர் பொருளை வஞ்சனையாக அபகரித்தல் போன்ற மாபாதக செயல்களை செய்தவரெல்லாம் இச்சென்மத்திலே தன்னை தானே மயக்கும்படியான பொருள் கொடுத்து தீமையை விலைக்கு வாங்கி மயக்கம் உண்டாக்கி மனிதனை மரணத்தில் தள்ளவல்ல மதுவினை அமிர்தமாய் எண்ணி உண்டு தன்னைத்தானே மயக்கிக்கொண்டு அறிவு கெட்டு, புத்தி மழுங்கி, குணப்பண்புகளெல்லாம் தம்மிடமிருந்து விடுபட தன்னிலை மறந்து தன் தகுதி மறந்து மயக்கமுற்று பிறரை வஞ்சித்த பாவத்தின் தாக்கம் அதிகமாக அதிகமாக தன்னைத்தானே மயக்கமுறச் செய்து மயங்கி மதுவிற்கு அடிமையாகி மீளமுடியாமல் செத்தும் போவான். இவன் மானம் கெட்டு சாவது மட்டுமல்ல தன்னை சார்ந்த குற்றத்தினால் அவனது குடும்பத்தினரையும்
நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவமானப்படும்படியான சூழலை உண்டாக்கி விட்டு அடுத்த ஜென்மத்திற்கும் குடும்பத்தினரால் வருகின்ற சாபத்தினையும் சேர்த்தே வாங்கி செல்வான் பாவி.



இந்த உண்மையை உணர்ந்திடப் பெறுவார்கள் முருகனருளால். உணர்ந்து யாரும் அறியவில்லை ஆனால் கடவுள் இருக்கின்றான், தர்மம் உள்ளது, முருகன் இருக்கின்றான், தர்மநெறி தவறிவிட்டால் தண்டிக்கப்படுவோம், பாவபுண்ணியத்திற்கு பயப்பட வேண்டும் என்று உணர்ந்து இச்சென்மத்திலாவது பிறரை ஏமாற்றாமல் வாழவேண்டுமென்ற உண்மை அறிவினை பெறுவார்கள்.



முன்சென்மங்களிலே தன்னை நம்பிய பெண்ணை காதலித்து தக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வஞ்சித்து சுகம் பெற்று பின்னர் தனது அதிகாரம் மற்றும் பணத்தின் பலம் போன்றவற்றை பயன்படுத்தி அவளை மிரட்டி ஏமாற்றுதல் பெண்ணிடம் பொய் சொல்லி கற்பை சூறையாடுதல், பெண்ணை திருமணம் செய்வதாக வாக்களித்து கெடுத்து பின் கைவிடல், விரும்பாத பெண்ணை வலுவினில் சென்று அபகரித்தல், பெண்ணை கற்பழித்தல் போன்ற பெண் கொடுமைகளும், வேலைக்கு வருகின்ற பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி தமது காம இச்சைக்கு அவர்களை பலியாக்குதல் அல்லது வேலைக்கு வந்த பெண்களை பயமுறுத்தி இச்சைக்கு பணிய வைத்தல் போன்ற வெளியில் சொல்ல முடியாத பெண் பாவங்களை செய்தவர்கள் எல்லாம் இச்சென்மத்திலே பெண் மயக்கமுற்று பெண்நினைவாகவே அலைந்து திரிந்து காமவயப்பட்டு விலைமகள் தொடர்பினை நாடி தீராத காமத்தினால் உந்தப்பட்டு நோய்களையும், அவமானங்களையும் பெற்று பாவியாவார்கள்.



அவர்களெல்லாம் முருகனருளைப் பெறபெற இவையெல்லாம் நம் முன்சென்மத்தில் செய்த பாவங்கள் என்றே உணர்ந்து அவையெல்லாம் முருகனருளால் மாற்றிட கூடும் என்றுணர்ந்து முருகனருளைப் போற்றி போற்றி முருகனருளைப் பெறுவார்கள்.



அதுபோலவே களவு செய்வோர்களும், களவின் வெளிப்பாட்டினால் கொலையும், இவையனைத்தையும் மறைத்திட நீதியின் தண்டனையிலிருந்து தப்பித்திட அடாது பொய் சொல்லியும் இவ்வாறாக ஒரு குற்றம் தொடர்ந்திட அதன் தொடர்ச்சியாய் பலபல குற்றங்களை தொடர்ந்து தொடர்ந்து செய்து கடைசியில் முடிவற்றதாய் குற்றங்கள் பெருகி நம்மை என்றென்றைக்கும் மீள ஒட்டாமல் நரகத்தில் தள்ளிவிடும் என்றுணர்ந்து இவற்றினின்று விடுபட முருகா உனதருளினால் தான் முடியும் என்று உணர்ந்து முருகன் திருவடியைப் இறுகப் பற்றிட தூண்டும்.



முருகன் திருவடியைப் பற்றி உருகி உருகி பூசித்திட பூசித்திட இப்பாவங்களின் தன்மையும் அதன் பாவவினைகளின் விளைவுகளை அனுபவித்து தீர்க்கும் தைரியமும் அதனின்று விடுபட முருகன் அருள் பெற்று தர்மம் செய்தால் விடுபடலாம் என்ற தர்மசிந்தையும் பெருகி தக்க ஆசானை நாடி, வினை நீக்கம் செய்திட துணிவும் ஆசான் துணையும் முருகனருளால் பெற்றிட பெறுவார்கள்.


தக்க சொற்குரு வழிகாட்டலினால் முன்சென்ம பஞ்சமாபாதக வினைக் குற்றங்களிலிருந்து விடுபட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.


இவையனைத்தும் முருகனருள் கூடினாலன்றி நடந்திடலாகாது. முருகா! முருகா!! முருகா!!! என்போம். பாவபுண்ணியம் பற்றி அறிந்து பாவம் நீக்கி புண்ணியம் பெருக்கி பண்பாளனாய் ஆகி முருகனடிக்கே அடிமைகளாகி முருகன் அருள் பெற்று ஞானமும் அடைவோம்.
...........


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்!!


ஞானிகள் பூசை இல்லையேல் அரங்கன் திருஅருள் இல்லையேல் அரங்கனின் குருஅருள் இல்லையேல் ஞானசித்தி இல்லை!!!





காலனாம் எமனையும் வென்று காக்கும், மரணம் வெல்ல வல்லதொரு அதிஅற்புதமான கருணைமிகக் கொண்ட சக்திதான் அரங்கா உமது சக்தி. அது தருமத்தின் சக்தியாகும். சக்தி மிகுந்த தருமச்சக்கரம் தனைக் கொண்டு உலகைக் காக்கின்ற அரங்கர், தர்ம சக்கரத்துடன் கடைத்தேற்றவல்ல தூயநெறியாம் சன்மார்க்க நெறி என்கின்ற ஜீவதயவாய் ஆனதொரு தூயநெறிமுறையையும் உலகிற்கு அளித்து கடைத்தேற்றி ஞான வாழ்வளித்து காக்கின்ற சக்தி மிகக்கொண்ட இவ்வுலகின் மகாஞான குருநாதனே அரங்கனாவார். உத்தமமகா ஞானி கலியுக காவல்தெய்வம், யுகமாற்ற தலைவன் அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிகரின் திருவடிகளிலே உடல், பொருள், ஆவி என்றே அனைத்தையும் சரணாகதியாக்கியே உளமார சரணடைந்தோர்க்கெல்லாம் அற்புத ஞானி அரங்கனின் அருள்வேலி காக்கும்.


அற்புத அருள்வேலி அன்பர்தமை இடையறாது காத்து அவர் தமக்கு மரணகண்டங்களிலிருந்து பாதுகாப்பு நல்கி கடன் தொல்லைகளிலிருந்து விடுவித்து கவலை துன்பம் அணுகாது காத்து பிணி வென்று சுகமளித்து காத்து இரட்சிக்கும் அரங்கனின் அருள் சக்தி.


ஒவ்வொரு நாளும் அரங்கன் தம் திருவடிகளை மறவாமல் அவரவர் இல்லங்களிலே தவறாமல் பூசித்திடல் கட்டாயமாகும். அரங்கனின் திருவடிகளை மானசீகமாக மனக்கண்ணிலே நிறுத்தி குளிர்ச்சி பொருந்திய, ஒளி பொருந்திய ஞானமளித்து விதி மாற்றம்தனை செய்து அன்பரை கடைத்தேற்றக்கூடிய தேவர்க்கும் மூவர்க்கும் எட்டா அந்த புனிதத் திருவடிகளை ஆறுமுகனார் அவதாரத் திருவடிகளை அவரவரும் அவர்தம் கண்ணீரால், கண்ணீர் மலர் கொண்டு, மனமுருகி அவரவரும் தம்தம் எண்ணி வருந்தி குற்றங்களுக்கு வெட்கி அந்தரங்கத்திலே அரங்கர் திருவடிக்கு சமர்ப்பித்து மன்னிப்பு கேட்டு தம்தம் நிலைதனை அவரும் உணரும் வகையிலே மனஇளக்கம் கொண்டு இறையாம் அரங்கரிடத்து அந்தரங்கத்திலே பூசைதனிலே பொய்யின்றி உளமார உண்மையுடன், மன்னிப்பு கோரியும் அரங்கரின் அற்புதங்களை, புகழை, பெருமைகளை மனதார உணர்ந்து போற்றி துதித்து அண்ணல் அரங்கரை அவர்தம் உண்மை சொரூபமாம் ஞானசோதி சுயம்பிரகாச அருள்ஞான வள்ளல் யோகானந்த ஞானானந்த சதாசிவ சாந்தசொரூப ஞானத்தலைவன்




முருகப்பெருமானாக எண்ணியே அன்பர் புறக்கண் தோற்றத்தில் கண்டிட்ட அரங்கரின் உருவம் கண்டு ஏமாறாது பிரம்மாண்ட சோதி பெருஞ்சுடராய் தோன்றும் ஒளி பொருந்திய அரங்கர் தம்மை மனதினில் இருத்தி கண்ணீர் மல்க மல்க நெஞ்சம் உருக உருக தவறுகளை உணர்ந்து உணர்ந்து மன்றாடி மன்னிப்பு கோரி வெட்கி வணங்கி அவர் திருமுன் மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களும் கருவிகளும் ஒடுங்கிட மனசலனமின்றி வாய்புதைத்து மனம் பரிதவித்து வணங்கி வணங்கி அரங்க நாமம்தனை நாதழும்பேற அரங்கா அரங்கா என்றே அரற்றி கூறி ஆன்மா சோர அரங்கர் அருளை பெறவே மன்றாடி நின்றிடல் வேண்டும்.


அங்ஙனமே உளம் உருகி மன்றாடி நிற்கும் உண்மை பக்தராம் அன்பர் தமக்கு அவர்தம் ஆசைகள் அரங்கரின் அருளால் நிறைவேற்றப்படும். அந்த அன்பர் தமக்கு மட்டுமன்று அவர்தம் குடும்பத்தினருக்கும் அவரது பூஜா பலன்களாலே அவையனைத்தும் அருளப்படும்.


அண்ணல் அரங்கர் வாழும் ஞானஆலயமாம் ஓங்காரக்குடில் தனிலே சமைக்கப்படுகின்ற உணவு சாதாரண பசியை போக்குகின்ற உணவு மட்டுமன்று. அது ஞானிகள் அருளாசிகளினாலே சமைக்கப்படுகின்றதனாலே அருள்நிறை அருளமுதாகும். அருளமுதாம் குடில் உணவு ஆயுள்தனை விருத்தி செய்து காக்கும் அமுதத்திற்கு ஒப்பான உணவாகும்.


அதுவே பிணி தீர்க்கும் அருமருந்தாகும். ஓங்காரக்குடில் நாடி வந்து ஆங்கே தொண்டுகள் பொருளுதவிகள் செய்து தங்கி அரங்கரின் அன்பிற்கு வசமாகி ஆங்கே ஞானிகளருளால் சமைக்கப்படுகின்ற அருள் உணவை மனமார உண்டு செல்கின்ற அவரவர்க்கும் அவர்கள் மேற்கொண்ட செயல்களிலெல்லாம் செயல் வெற்றி பெறுவதோடு அவர்கள் மனதினுள் எண்ணிய எண்ணங்களில் வெற்றியும் பெற்று அவர் தம்மை அரங்கன் அருளும் ஆசிகளும் உடனிருந்து காக்கும்.


ஞானத்தலைவனாம் முருகப்பெருமானின் சக்தியை முழுமையாகக் கொண்ட உத்தம மகாஞானயோக வள்ளல் ஞானி அரங்கமகா தேசிகரின் வல்லமைகளை குறைத்து எண்ண வேண்டாம். அவரவர் செய்திட்ட வினைகள் காரணமாகவே அரங்கனை அவர்தம் ஆற்றலை, அவர் தன்மையை பார்க்கவோ, கேட்கவோ, சிந்திக்கவோ, அறியவோ, எண்ணவோ, உணரவோ முடியவில்லை. இது அவரவர் செய்திட்ட வினையினால் வந்திட்ட குற்றமே அன்றி அரங்கர்பால் தவறில்லை. ஆற்றல்மிகு அருள்ஞானி அரங்கரின் அருளொளியை, அற்புதத்தை கருணையை உணருகின்ற வாய்ப்பு அன்பர்தம் பாவத்தால் காணமுடியவில்லையே தவிர அரங்கரின் ஆற்றலில் உள்ள குறையன்று.



ஆதலின் அரங்க தரிசனம் பெறுதல் அவசியமாகும். அரங்க தரிசனம் சாபவிமோசனம் அன்றி அரங்கரின் சக்தி மீதோ அரங்கரின் செயல் மீதோ அரங்கரின் தோற்றம் மீதோ சந்தேகம் கொண்டு அரங்கதரிசனம் தனை அடையாது, அரங்கர் தொண்டுகள் தமை செய்திடாமல், “அவரவரும் இக்கலியுகத்திலே நெறிக்குட்பட்டு தொண்டு செய்து கடைத்தேறுதற்கு கிடைத்திட்ட ஒரே வாய்ப்பான குடில் தொண்டை மனமுவந்து செய்திடாமல் ஏமாந்து போய் வீணாய் போகாதீர்கள்”. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தொண்டுகள் செய்திட அரங்கன் மகாமகா கருணை கொண்டு அருளிய வாய்ப்பை உங்கள் கடைத்தேற்றத்திற்காக உண்டான வாய்ப்பை கண்டிப்பாக நழுவவிடாதீர்கள், நழுவவிட்டால் பின்னர் கிடைக்காது.


உலகப்பெருமாற்றம் விரைந்து அருகில் வருகிறது, வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கவனமுடன் விழிப்பாக இருங்கள், ஏமாந்து விடாதீர்கள். அவரவர்க்கு கிடைத்திட “ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்” வாய்ப்பை நழுவவிடாது யாவரும் பெற்று பயனுற வேண்டும் என்பதினாலே உங்கள் மீது கருணை கொண்டு சொல்கின்றேன் குருராஜன் யானும் சொன்னேன்.



தயவே வடிவான ஞானஜோதி அரங்கமகா தேசிகரே இவ்வுலகை கலிகால இடர்களிலிருந்து காத்து மீட்டு இரட்சிக்க வந்திட்ட நல்ஞானி ஆவார். அவர்தம் தொடர்பினின்று எந்த சூழ்நிலையிலும் விலகிடாதீர். ஞானிகள் பெருமை உரைத்து ஞானிகள் திருவடியைப் பற்றிட ஏதுவாய் நடக்கின்ற ஞானிகள் கலந்து அருளாசிகள் செய்கின்ற ஞானயோகி அரங்கனால் நடத்தப்படுகின்றதுமான  ஓங்காரக்குடில்தனிலே நடக்கின்ற ஞானிகள் பூசைகளிலே தவறாது கலந்து கொள்பவர்களுக்கே ஞானியர்களின் சூட்சும அருள் கிடைக்கப்பெற்று ஞானசித்தி எட்டும் என உறுதியாக கூறுகிறேன் என்கிறார் மகான் குருராஜர்

Saturday, 19 November 2016

முருக தரிசனம் பாவ விமோசனம்!

முருகா என்றால்,



வேதாகமங்களெல்லாம் ஓங்கி உயர்ந்து போற்றுகின்ற வேதநாயகன் பரப்பிரம்ம சொரூபியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் முருகப்பெருமானே என்பதை உணரலாம். வேதங்களும், ஆகமங்களும், இதிகாசமும், புராணமும், ஞானநூல்களும், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும், தோத்திரங்களும், பிரபந்தங்களும் இன்னும் பலபலவாய் தோன்றிய வேதாகம நூல்கள் அனைத்தும் அந்த மறைபொருளாய் கால பரியந்தம் தனிலே வெளிப்படுத்தாது மறைக்கப்பட்ட ஆதி ஞானத்தலைவன் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாமங்களினாலே சொல்லி அழைக்கப்பட்ட நாமங்களின் நாயகன் முருகனே என்றும் அவனே ஞானமளிப்போன் அவனே அனைத்து நாமத்திற்கும் அழைத்த அக்கணமே வந்தருள் செய்து அன்பர் குறை தீர்த்திட்டவனும் எங்கெங்கிருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராயும் திகழ்ந்தனன் ஆதிமூல நாயகனாம் வேற்படை வேலவனாம் முருகப்பெருமானே என்றும் அறியலாம்.



ஆதலின் மனித மல அறிவின் துணை கொண்டு ஞானிகள் இயற்றிய ஞானநூல்களின் சாரங்களை நமது அறிவினால் உணர முடியாது என்றும், உணர்ந்து அந்த நூல்களில் அந்தந்த ஞானிகள் பின்வரும் திருக்கூட்ட மரபினர் அவர் சார்ந்த துறையின் தன்மையை தெரிந்து கொள்ளவே அவரவர் அனுபவத்தை ஞானானுபவத்தை எழுதி வைத்தனர் என்றும், அந்த அனுபவங்களை உணர்வால்தான் உணரமுடியுமே அன்றி வார்த்தைகளால் உணர முடியாது என்றும் அவர்கள் கண்டு இரசித்த பேரானந்த அனுபவத்தை ஞானநிலை கொண்டே நாமும் அனுபவிக்க முடியும் என்றும் உணர்ந்து ஞானமடைய ஞானிகள் திருவடியே துணையென்றும் ஞானிகள் திருவடி பற்றினாலன்றி ஞானபண்டிதனை அடைதல் இயலாது என்பதையும் உணரப்பெறுவார்கள்.



முருகா! முருகா!! முருகா!!! என்றே செபித்திட செபித்திட முருகன் அருள் கூடி அனைத்து தெய்வங்களின் பெயரினாலும் அழைத்திட்டாலும் அங்கே முன்னின்று அவரவர் விரும்பிய வடிவினிலே அருளுபவன் முருகன் தான் என்றும் அவரவர் செய்திட்ட பாவபுண்ணியத்திற்கு ஏற்பவே அவரவர் வழிபாடு இருக்கும் என்றும் அவரவரும் வினைக்கேற்ப அவர்தம் உள்ளத்து தோன்றும் சிந்தனைகள் மாறி சிலர் சிறுதெய்வ வழிபாட்டிலும், சிலர் பலியிடும் தெய்வங்களையும், சிலர் மும்மூர்த்திகளையும், சிலர் சக்தி வழிபாட்டிலும், சிலர் காளி மாரியம்மன் போன்ற தேவதைகளையும் சிலர் பல மதம் சார்ந்தும் வணங்கிடுவர் என்றும் முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அருள்பலம் பெற்றவர் தமக்கு அருள்சோதி வடிவினனாக தோன்றி அருள்கின்றவன் அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனாக தோன்றி அருளி காக்கின்ற அந்த முருகனே அவரவர் வினைக்கேற்ப பன்றியாகவும், நாயாகவும், எருமையாகவும், காளியாகவும் இன்னும் பலபல வடிவினில் சிங்கமாகவும், புலியாகவும், அவரவர் பக்திக்கும் பாவவினைக்கேற்பவும் காட்சி தருகிறான்.



ஆயினும் அவனது பக்தி உண்மையாய் இருப்பின் அங்கிருந்தும் பெருந்தாயன்பினால் அவன் விரும்பிய வண்ணமே அருளுகின்றனர் முருகன்.



அற்புதமாய் ஆனந்த தரிசனம் பெற்று உயர்ஞானம்தனை பரிசாக பெற்று உயர்வடையக் கூடிய வகையிலே அழகுடை அதியற்புத சோதி வடிவினனாக தோன்றும் ஆறுமுகனை ஞானிகள் துணையிருந்தாலன்றி புண்ணிய பலம் இருந்தாலன்றி, குருவழிகாட்டல் இருந்தாலன்றி, ஞானமார்க்கம் வருகையுற்றால் அன்றி, அன்னதானம் செய்து பிறஉயிர் துன்பம் நீக்கினாலன்றி, சுத்த சைவம் கடைப்பிடித்தாலன்றி பெற இயலாது என்பது சத்தியம் என்பதையும் உணரலாம்.



சோதி வடிவுடை முருக தரிசனம் பாவவிமோசனம்! குறையுடைய சிறு தெய்வ தரிசனம் பாவபெருக்கம்! என்பதையும் முருகன் அருளால் உணரப்பெறுவார்கள்.



ஆக பன்முகம் காட்டும் முருகனை புண்ணிய பலத்தினால், அருள்பலத்தால் முற்றுப்பெற்ற ஞானிகள் உதவியுடன் முருகனை முருகனாக பார்க்க முடியாமல் போனது அவரவர் செய்திட்ட பாவமே என்றும் முருகனை பலவித கோர வடிவினனாக பார்த்து அவனது உண்மை சொரூபம் தனை அறிய ஒட்டாது தடுத்தது நாம் செய்த பாவமே என்றும் உணர்ந்து உண்மை ஞானசொரூப ஞானபண்டித முருகனை தரிசித்திட அயராது நாத்தழும்பேற முருகநாமத்தை சொல்லி சொல்லி பாவம் கழிந்து முருகதரிசனம் பெற வேண்டும் என்ற முயற்சியும் நம்முள் தோன்றும்.


தோன்றிய அம்முயற்சி முருகனருளால் முருகதரிசனம் கிடைத்திட துணை வரும். முருகா! முருகா!! என்று விடாது சொல்லி சொல்லி முருகனை நெஞ்சார நினையுங்கள்.


முருகனை முருகனாக பார்த்து மகிழ்ந்து ஞானம்தனை அவனிடத்து வரமாய் பெறுங்கள்.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!

முருகா என்றால்,



மும்மலக்குற்றத்திற்கு காரணமானதை அறிந்து மும்மலக் குற்றத்தை முருகன் அருளால் நீக்கி அறியாமையினின்று விடுபட்டு தெளிந்த அறிவை பெற்று நிலையற்ற தொடர்பிறவியை வென்று நிலையான மரணமில்லாப் பெருவாழ்வை பெறலாம் என்று உணர்வான்.


நாம் காணும் அனைத்தும் நிலையற்றவைதான். இந்த நிலையற்ற பொருளெல்லாம் ஒரு கால பரியந்தத்தில் அதனதன் தன்மைக்கேற்ப அழியத்தான் போகிறது என்ற உண்மையை உணர்ந்திடுவான் முருகனை போற்றும் முருகபக்தன்.


ஆயினும் நிலையற்ற எல்லா பொருள்களும் கண்டிப்பாக நிலையான ஒன்றிலிருந்துதான், தோன்றியிருக்க வேண்டும் என்றும் நிலையான ஒன்றிலிருந்து தோன்றிய அவையெல்லாம் அதனதன் தன்மைக்கேற்ப செயல், வினை வடிவமாகி பல்வேறு சூழ்நிலைக்கு ஆட்பட்டு அதனதன் சூழ்நிலைக்கேற்ப காலத்தின் மாற்றத்தினால் படிப்படியாக தோன்றியது போலவே தேய்ந்து மறைந்தும் பின் தோன்றுகின்றன என்பதையும்  அறிகின்றான்.



முருகா! முருகா! முருகா! என்றே சிந்தையெல்லாம் முருகனின் திருநாமம்தனை ஏற்றி தொழுது தொழுது வழிபட வழிபட தோற்ற இரகசியமும் அவனுள்ளே முருகனே தோன்றி உணர்த்திட அறியப்பெறுவான்.


எது என்றும் அழிவில்லாத பொருளாய் இருக்கின்றதோ அதுவே நிலையானது என்றும், அதுவே பரம்பொருள் என்றும் அறிகின்றான். நிலையான அந்த பொருள் சிற்றணுவாகிறது, சிற்றணுவாகிய அதுவே ஆன்மா என்றே பெயர் பெற்று பரம்பொருளாய் ஆதி வஸ்துவினின்று பிரிந்திட அது தனக்கென்று ஒரு அணுக்கூட்டத்தை தனது கவர்ச்சியினால் தோற்றுவிக்கிறது. நிலையான அந்த ஆன்மா நிலையற்ற அணுக்களால் ஆன ஒரு கூட்டினை தனது ஈர்ப்பினால் கட்டுகிறது. அதற்கு உண்டான அனைத்து கட்டளைகளும் அந்த ஆன்மாவின் உள்ளேயே புதைந்துள்ளது என்பது இதுவரை யாரும் அறியமுடியாத அறிவிற்கும் எட்டாததொரு மிக பிரம்மாண்டமான சூட்சுமமாகும்.


அப்படி தோன்றிய ஆன்மாவானது மீண்டும் மீண்டும் தோன்றுகின்ற கூட்டினை ஸ்திரப்படுத்தி தம்மோடு அந்த கூட்டினை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அந்தந்த தேர்ந்தெடுத்த உருவாக்கிய கூட்டின் தன்மைக்கேற்ப கால வித்தியாசங்களில் ஆன்மாவிற்கும் கூட்டிற்கும் உள்ள தொடர்பு அறுபட்டு போவதால் கூட்டைவிட்டு ஆன்மா பிரிகிறது. ஆன்மா பிரிந்த உடனே அதுவரை ஆன்மாவால் ஈர்த்து வைக்கப்பட்ட அந்த கூடு ஈர்ப்பு மையம் விலகியதால் நெறிப்படுத்தும் கட்டளை கேந்திரம் விலகியதால் ஒன்றுடன் ஒன்று இணைய இயலாத அணுக்களெல்லாம் அவைஅவை பிரிந்து பிரிந்து எங்கிருந்து கூடியதோ அங்கேயே பிரிந்து செல்கின்றன.


இப்படி ஆன்மா பரமாணுவினின்று தோன்றி தனக்கென இதுவரை ஒரு கூடு கிடைக்காமல் அலைந்து அலைந்து பல்வேறு கூடுகளிலே கட்டி தஞ்சம் புகுகிறது. ஆனால் எங்கும் நிரந்திர கூடு கிடைக்கவில்லை என்பதையும் ஒரேஒரு அணுத்திரளில் மட்டுமே ஒரே ஒரு அணுக் கூட்டமைப்பில் மட்டுமே ஆன்மாவும் அந்த அணுக்கூட்டமைப்பின் அணுக்களும் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பை உள்ளதை உணர்கிறது. அந்த கூட்டமைப்பே மனித தேகம் என்ற பெயர் பெற்றது.


இப்படி இயக்கமற்ற ஒன்றிலிருந்து தோன்றிய ஆன்மாதான், பல்லாயிரங்கோடி ஆண்டுகளாக எடுத்த பலப்பல தேகத்தின் செயல்பாட்டினால் அது அத்தேகத்தின் வாயிலாய் தோன்றி செயல் பதிவுகளையும் (வினைப்பதிவு) தன்னுடனே எடுத்து செல்வதால் அடுத்த அணுக்கூட்டமான தேகத்தை அமைத்திட சார்ந்திடும்போது அந்த ஆன்மா பெற்ற வினைப்பதிவும் தேக அணுக்களை சார்ந்து தேகத்தின் அணுக்களிலும் தன்வினைப்பதிவை
பதிப்பதால் எக்காலத்தும் அணுக்கூட்டமும் ஆன்மாவும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லாமல் போகிறது.


ஆன்மாவின் செயல்களால் பிற ஆன்மாக்கள் பட்ட துன்பங்களினால் பிற ஆன்மாக்களிலிருந்து வெளிப்பட்ட பதிவுகளெல்லாம் இந்த ஆன்மாவை தாக்குவதால் பதிவுகளில் குற்றம் ஏற்பட்டு ஆன்மாவை மாசுள்ளதாக்கி தொடர்ந்து தொடர்ந்து வருவதினாலே ஆன்மா மும்மலக்குற்றம் எனும் சிறையினுள் அகப்பட்டு மீள முடியாமல் தவிக்கிறது. அதுவே ஒரு தேகத்தினோடு ஆன்மா இரண்டற கலக்க முடியாமல் அறியாமையில் மூழ்கி, கலக்க வழி தெரியாது தடுமாறுகின்றது.


இப்படி தடுமாறுகின்ற ஆன்மாக்கள் முற்றுப்பெறுவதற்கான இரண்டற கலப்பதற்கான ஏதுவான மனிததேகத்தினுள் பிரவேசித்து அந்த அணுதிரள்களிலே அணுவுக்கு அணுவாய் கலந்துள்ள மும்மலக் கசடை நீக்கிட ஒரு உபாயம்தனை அற்புதமான வேதியியல்தனை அதிசூட்சா சூட்சுமம் மிக்கதொரு வழிமுறையை கண்டு பிடித்து சேராத தேகத்தை ஆன்மாவுடன் சேர்த்து வெற்றி கண்டான் ஆதித்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் முழுதும் தன் அறிவினால் உணர்கிறான் முருகனின் ஆசி பெற்ற முருகபக்தன்.



பிறஉயிர்களுக்கு செய்திட்ட தீயசெயல்களே வினைப்பதிவுகளாக மாறி, நிலையான ஆன்மாவில் பதிந்திட அந்த ஆன்மா மாசுபடுகிறது. அதனால் மாசு மிகுந்த தேகமே அமைகிறது. ஆதலின் மாசுபட்ட ஆன்மாவை சுத்தி செய்தால் தேகமும் சுத்தியாகும் என்பதை உணர்த்திடுவான் ஆதிதலைவன் முருகப்பெருமான்.


ஆதலின் பிற உயிர்களுக்கு செய்திட்ட துன்பங்கள் பாவினைகளாக பதிந்திட, பிறஉயிர்களுக்கு செய்கின்ற உபகாரம் தூயவினைகளாக நற்பதிவுகளாக பதியும் நற்பதிவுகள் எல்லாம் ஒன்று கூடிட ஜீவதயவினால் ஆனதொரு சாவி, அந்த ஆன்மாவிற்குள் கிடைத்திடும் ஆன்மகுற்றம் நீங்க நீங்க அந்த ஜீவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்து எனும் இயற்கை சார்ந்த அடிப்படை நல்வினை பதிவுகளெல்லாம் நல்ல செயல்செய்யும் ஆன்மாவினை சாரச்சார ஆன்ம ஒளி பெற்று அதன் விளைவாய் அது பெற்ற தேகத்தினிலே அணுக்களை சேர ஒட்டாது தடுக்கின்ற மும்மலக்குற்றமெனும் கசடை நீக்கவல்ல ஒரு சாவியை, அதாவது அடிப்படை பதிவுகளை வெளிக் கொணர்கிறது.


ஒன்று கூடாத அணுத்திரளை ஆன்மாவுடன் ஒன்று கூட்டிட ஏற்கனவே ஒன்று கூடிட்ட ஆன்மா ஒன்றினது வழி நடத்தல் அவசியமாகிறது. அதன் மூலப்பிரதி தேவைப்படுகிறது. அதுவே ஞானிகளின் ஆன்மாவாகும். அதுவே முற்றுப்பெற்றவர் தம் ஆன்மாவாகும். அந்த முற்றுப்பெற்ற ஞானிகளின் வழி நடத்துதலினாலே இந்த ஆன்மா சேராத அணுக் கூட்டத்தினின்று எப்படி கசடை நீக்குவது என்று கற்றுத்தெளிந்து படிப்படியாக படிப்படியாக பல்லாயிரமாண்டு சுமார் 27,000 வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு மீள்வினைக்கு ஆளாகாமல் ஞானிகள் துணையுடன் வந்து வந்து தேக அணுக்கூட்டத்தில் உள்ள கசடை நீக்கி நீக்கி தூய்மையான அணுக்களால் கூடிய சுத்த தேகம்தனை இறுதியில் பெறுகிறது.


பின்னரே ஞானத்தலைவன் ஆறுமுகனார் ஒளி பொருந்திய அந்த பேரான்மா முன்னிலையிலே ஞானிகள் ஆன்மாக்களெல்லாம் ஒன்றுகூடி நிற்க, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாவினுள் பரமானந்த நிலைநிற்கும் ஆறுமுகனார் ஆன்மாவின் உட்பிரவேசத்தினால் ஆன்ம சுத்தி பெற்று அந்த ஆன்மா பெற்ற தேகக்கசடை முருகன் நீக்குவான்.


ஆறுமுகனார் தேகக்கசடை ஜீவகாருண்யமாகிய ஜீவதயவு எனும் பிற உயிர்கள் நமக்களிக்கின்ற மகிழ்வின் கூறுகளாய் ஆன நல்வினை பதிவுகளைக் கொண்டே இந்த கசடான தேகத்தை தூய்மைப்படுத்துவதினால் முதலில் களங்கப்பட்ட ஆன்மாவை சதா ஜீவதயவின் பெருக்கத்தை அளவிறந்து பெறுதற்காக ஏராளமான புண்ணியங்களை மிகுந்து செய்திட தூண்டி பிற உயிர்களின் ஆசிகளை பெறச்செய்து பெறச்செய்து ஞானவீட்டிற்கான திறவுகோலை பெற்றுத் தருவான் ஞானபண்டிதன்.


முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! என்றே அயராது நாத்தழும்பேற நாமம்தனை சொல்லி சொல்லி ஜீவதயவின் சிகரம், ஆதிமூல தலைவன் முருகன் ஆசி பெறப்பெற ஜீவதயவுடை முருகன் அவன் தம்முள்ளே ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோல் கொண்டு ஞானமடையச் செய்து ஆன்மா சுத்தி பெறச் செய்து ஒரு சிறப்பான தனித்தன்மையுடைய வேதியியலால் இணையாத அணுக்கூட்டத்தை குற்றம் நீக்கி இணைத்திட துணைபுரிந்து இணைத்து ஆன்மாவை விட்டு மீண்டும் பிரியாத வகையிலே ஒன்று கூட்டி தருவான் ஞானபண்டிதன்.


ஜீவதயவின் அருள் கூடவே ஞானபண்டிதன் அருளைப் பெற்று அந்த ஆன்மாவும் ஆன்மாவிற்கு உண்டான அணுத்திரள் கூட்டமைப்பாம் தேகமும் ஒன்றென கலந்து ஆன்மா எந்த ஆதிவஸ்துவினின்று தோன்றியதோ அதைப் போன்றே பஞ்சபூதத்தினால் பெறப்பட்ட அணுத்திரள் கூட்டமான தூலதேகமும் அகதேகமாக அணுதேகமாக ஒளிதேகமாக மாறி ஆன்மாவைப் போன்றே அதுவும் ஆகினபடியால் அது மீண்டும் எக்காலத்தும் ஆன்மாவை விட்டு பிரியாது, தோன்றிய பஞ்சபூதத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டும் பஞ்சபூதத்துவினின்று விடுபட்டு ஆதி வஸ்துவாய் மாறுகின்றபடியாலே ஆன்மா தேகம் விட்டு பிரிதலான மரணம் என்ற ஒன்று அந்த ஆன்மாவிற்கோ அது பெற்ற உடலிற்கோ ஏற்படாமல் அந்த ஆன்மா என்றுமே அழியாத ஆன்மாவை விட்டு பிரியாத மரணமில்லா தேகத்தைப் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வை ஜீவதயவினால் மட்டுமே இறுதியில் அடைகிறது.


இப்படி ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்கு அதற்கு சாவியாக இருப்பதும் தேகக்கசடை நீக்க பயன்படுவதும் ஜீவதயவு எனும் ஜீவர்கள்பால் செலுத்துகின்ற பரிவே காரணமாய் இருப்பதினாலே அந்த ஜீவதயவே இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வாக தூயதேகமாக ஆதிமூல வஸ்துவிற்கு அடிப்படையாக இருப்பதையும் அறிவான் முருகபக்தன்.



அறிய அறிய, தெளிய தெளிய முருகன்மீது பக்தி கூடி கூடி அந்த ஜீவதயவு என்பதே முருகனின் அருளாய் வெளிப்படுகிறது என்பதையும் உணர்வான் ஜீவதயவின் வடிவமே முருகன் என்றும் முருகனின் வடிவமே ஜீவதயவு என்றும் ஜீவதயவின் பேராற்றலே அருட்பெருஞ்சோதியாய் தோன்றுகிறது என்பதையும் உணர்ந்து ஜீவதயவைப் பெருக்கி கடைத்தேறுவான் முருகபக்தன்.


வேலனை போற்றுவோம்
காலனை வெல்லுவோம்.

-சுபம்-
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Thursday, 10 November 2016

நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது!

முருகனை வணங்கிட :


காமத்தினால் பல ஜென்மங்களிலே நாம் பலபெண்களை கெடுத்த பாவங்களையும், கற்பழித்த பாவங்களையும், தூயநெறி நடக்கும் கற்புடைய பெண்களை கெடுத்த பாவங்களையும், கோபத்தால் பல உயிர்களுக்கு நாம் செய்த பாவங்களையும், பொறாமையால் பலருடைய வாழ்வை கெடுத்ததால் உண்டான பாவங்களையும், பேராசையால் பிறர் சொத்தை அபகரித்ததினால் உண்டான பாவங்களையும், மற்றவர்மீது புறஞ்சொல்லி பிறர் வாழ்க்கையை கெடுத்ததினால் உண்டான பாவங்களையும், செய்நன்றி மறந்ததால் உண்டான பாவங்களையும், உதவி செய்தோருக்கே இடையூறு செய்த கொடும் பாவத்தினால் உண்டான பாவங்களையும் உயிர்க்கொலை செய்ததினால் உண்டான பாவங்களையும் உணரச் செய்து அந்த பாவவினைகள்தான் இச்சென்மத்திலே நம்மை நோயாக, வறுமையாக, பகையாக, பல்வேறு வகையான பிரச்சனையாக இப்போது நம் வாழ்விலே குறுக்கிடுகிறது என்பதையும் உணரச்செய்தும், இப்படி நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது என்பதை முருகனை வணங்க உணர்ந்து இவையாவும் நாம் செய்ததினால் வந்ததுதான் என்பதையும் இப்பாவ வினைகளிலிருந்து நாம் மீண்டு வரவேண்டுமே அன்றி பாவங்களின் போக்கிலே போகாது அவற்றை ஏற்று அனுபவிக்க வேண்டுமே அன்றி பாவத்தினால் உந்தப்பட்டு மேலும் மேலும் பாவியாகாது நம்மை காத்துக் கொள்ள முருகன் திருவடியே துணை என்பதையும் உணர்ந்து முருகனது திருவடியை தீவிரமாக பற்றி பூஜிப்பான்.


முருகனது திருவடியை பூஜிக்க பூஜிக்க பூஜிக்க பாவவினைகளின் தன்மையை ஆழமாக உணர்வான். நாம் செய்த பாவங்கள் நம்மை மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டி நம்மை நரகத்தில் தள்ளி எடுத்த இந்த அற்புதமான மானுட பிறப்பினின்று இழிநிலை பிறப்புகளை உண்டாக்கிவிடும் என்றும், பாவம் மிகுதியாக மிகுதியாக நாம் நாயாக, பன்றியாக, சொறிபிடித்த நாயாக, நொண்டி பன்றியாக, கழுதையாக, பாம்பாக மாறிமாறி நமது பாவவினை நம்மை பிறக்கச் செய்து இறுதியில் மலத்தில் நெளியும் புழுவாகவும் பிறக்கச் செய்துவிடும் என்பதையும் உணர்ந்து பாவத்தினால் வருகின்ற துன்பங்களை ஏற்றுக் கொள்வான் முருகபக்தன்.



முருகனை வணங்கா விட்டால் இந்த பாவங்கள் நம்மை சூழ சூழ பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாதுபோய் பலவிதமான இழிபிறவிக்கு ஆளாவோம் என்பதை தெளிவாக உணர்ந்து முருகனை மேலும் மேலும் வணங்கிட, செய்த பாவவினைகள் செய்தவைதான், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு என்பது இறைவனிடத்தும் இல்லை, இயற்கையிடத்தும் இல்லை. நாம் செய்தவை நமக்கு அப்படியே திரும்பித்தான் வரும் என்பதையும் முருகன் அருளால் பாவவினைகளின் வேகத்தை குறைத்து மெதுமெதுவாக முருகன் அருள் துணையால் அனுபவித்து நீக்கி கொண்டும், முருகனருளால் மேலும் பாவங்களை செய்யாதிருக்க முருகன் துணையுடன் தானதருமங்களைச் செய்தும் தனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் உணர்வான்.



நாம் செய்த பாவங்கள் நம்மை நோயாக தாக்கும்போது நாம் வணங்கிய முருகன் நமக்கு மருந்துவனாக வருவதையும், நோய் நீங்க மருந்தாகவும் அவனே வருவதையும், நோய் நீக்க தேவையான பொருளாக அவனே வருவதையும் தெள்ளத்தெளிவாக உணர்வதோடு பாவத்தின் தீவிரம் முருகன் அருளால் கடுகி விரைந்து குறைவதையும் காண்பான் முருகபக்தன்.


பாவத்தை உணரச்செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க துணையாய் இருந்து காப்பதும் முருகனின் கருணையே!


ஆதலில் அருள்நிறை கருணையே வடிவான காத்தருள் புரிகின்ற எல்லாம்வல்ல இறைவனாம் முருகப்பெருமானின் திருவடிகளை மனம் உருகி பயபக்தியுடன், “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ முருகனது திருநாமங்களை தொடர்ந்து சொல்லி சொல்லி மந்திர உரு செய்ய செய்ய முருகப்பெருமான் நம்மை சார்ந்து நமது பாவங்களான உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற பழக்கத்திலிருந்து முதலில் விடுவிக்கின்றான்.


முன்செய்த பாவங்களிலிருந்து மீள, நம்மை புண்ணியவானாக்கும் பொருட்டு வணங்கினோர்க்கு தேவையான பொருளாதாரத்தை கொடுத்து ஏழை எளியோர்க்கு அன்னதானங்கள் செய்ய தூண்டி அன்னதானங்களை செய்ய செய்து புண்ணியவானாக மாற்றி மேல்நிலையை அடையச் செய்கின்றான். ஜீவதயவினை உணரச் செய்து நம்மை ஜீவதயவுடையோராக ஆக்கி தூயநெறியிலே நடந்திடச் செய்து நம்மை பெரும் புண்ணியவான்களாக ஆக்கி இறுதியில் மரணமிலாப் பெருவாழ்வு என்கிற பெறுதற்கரிய பெரும் பேற்றினையும் தந்தருளி நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்கின்றான் முருகப்பெருமான் எனும் பெருங்கருணை தாய்.
...................

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Saturday, 29 October 2016

பற்றுகள் அனைத்தும் துறந்த மகான் பட்டினத்தார் அருளிய ஆசி நூல்

ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே!

உலகில் பலபேர் ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென பல வழிகளில் முயற்சி செய்து பலவிதமான நபர்களை சந்தித்து அவர்களால் தமக்கு வழிகாட்ட முடியுமா? என அவர்களை நாடி இறுதிவரை தெளிவு பெறாமல் அவரவர்களுக்கு தெரிந்தவரையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ, எதைஎதையோ கற்றுக் கொண்டு உண்மை ஆன்மீகம் பற்றியும், உண்மை வழிகாட்டியான குருநாதரைப் பற்றியும் தெரியாமல் தடுமாறி, தாங்கள் ஆன்மீகத்துறையில் முன்னேறி வருவதாக தாங்களாகவே கற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மேல் குற்றமில்லை.


இவர்களில் தர்மசிந்தனையுடன் தான தர்மங்கள் செய்பவர்களும், உண்மையான பக்தி விசுவாசத்துடனும், யாருக்கும் தீங்கு நினைக்காமல் இறைவனை மனமார பூஜித்தும் வருகிறவர்கள் இருக்கிறார்கள்.


ஆனால் அவர்களது ஆன்மீக வழிகாட்டியாக உள்ளவர்கள் சரியில்லாததால் இவர்கள் தடம்மாறி சென்று ஆன்மீகத்தில் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் உண்மை குருவை தேடிக் கண்டுபிடித்து அக்குரு உபதேசம் பெற்று அவர் கூறும் வழிகளைப் பின்பற்றினால் அவர்கள் இனிப்பிறவா நிலையையும் அடையலாம். இவர்கள் உண்மைகுரு யாரென்று தமக்குள் ஒரு கருத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அது என்னவெனில் குருவானவர் காட்டில் ஆசிரமம் வைத்திருப்பார்கள், அங்குள்ளவர்கள் எல்லோரும் காவி உடை தரித்து முனிவர்களாக இருப்பார்கள், அங்கு பெண்களே இருக்க மாட்டார்கள், அவர்கள் உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு யாரையும் சந்திக்காமல் இரகசியமாக வாழ்வார்கள், பொதுமக்களை சந்திக்க மாட்டார்கள். இரகசிய பூஜைகள், இரகசிய மந்திரங்கள் செய்வார்கள், ஜடாமுடி தரித்திருப்பார்கள், தாடி வைத்திருப்பார்கள், அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்தால் அவர்களைச் சுற்றி புற்று வளரும் அளவிற்கு தவம் செய்வார்கள், யாருடனும் பேச மாட்டார்கள், உடம்பெல்லாம் விபூதியோ திருமண்ணோ தரித்திருப்பார்கள், அவர்கள் உக்கிரமான பக்தி வசப்பட்டு ஆடுவார்கள் என்றெல்லாம் பற்பல கற்பனைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு இந்த உலகிலும் காடுகளிலும் தேடி அலைந்து இன்றுவரை யாரும் உண்மை குருநாதரை கண்டுபிடித்ததாக தெரியவில்லை.


உண்மையில் ஞானிகள் அப்படி மனித சமுதாயத்தை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். மக்களோடு மக்களாகவே சமுதாயத்தில் தொழில் செய்து கொண்டே, இறைவனை பூஜித்து வெளியே அடையாளம் தெரியாமல் இயல்பான வாழ்க்கையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் வீண் ஆரவாரம் இருக்காது, பொய் பேசமாட்டார்கள், ஜடாமுடியும் தாடியும் இருக்காது, பொய்வேடம் போடமாட்டார்கள். அவர்களது செயல்பாடுகளினால்தான் அவர்களை அடையாளம் காண முடியுமே தவிர தோற்றத்தினால் அடையாளம் காண முடியாது.


மகான் அகத்திய முனிவர், திருமூலர் போன்றோர் ஜடாமுடி தரித்து உருத்திரம் அணிந்து, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருப்பது போல் அடையாளம் காண்பிக்கப்பட்டு இருப்பது, அது தத்துவ விளக்கங்களேயாகும்.


மேலும் அவர்கள் நிலை உயர்ந்தவர்கள். அவர்களை அலட்சியமாக எண்ணக்கூடாது, இடையூறு செய்து விடாதீர்கள், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவே தவ வேடத்தில் இருப்பார்கள். ஒருவர் தவவேடம் போட்டதால் மட்டும் அந்நிலை அடைந்தவராக கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட உண்மை குரு, இப்போதைய காலக்கட்டத்தில் வள்ளல் பெருமானுக்கு பிறகு துறையூர் ஓங்காரக்குடிலாசான்தான் என்பதை மக்கள் உணர வேண்டும்.


அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவர் திருவடி பணிந்து பணிந்து அவர் செய்யும் அறப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் கலந்து கொண்டு தொண்டு செய்தால் குடிலாசான் ஆசியினாலும் மகான்களின் ஆசியினாலும் துயரண்டாத வாழ்வும், நற்செல்வமும், புகழும், கீர்த்தியும், நற்பண்புகளும் வாழ்வில் நினைத்ததை முடிக்கும் வல்லமையும், மனிதருள் மேன்மையான நிலையும் சிறந்த இடத்தையும் பெற்று மரணமில்லா பெருவாழ்வையும் இறுதியில் பெறலாம். இக்கலியுகத்தில் தற்போது ஞானி என்ற சொல்லிற்கு, ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே. அவரே முற்றுப்பெற்ற ஞானி, அவரை அடைந்து ஆசி பெற்றால் அனைத்தும் விளங்கும். ஞான சூட்சுமங்கள் படிப்படியாக தெளிவடையும், உண்மை புரியும் என மகான் பட்டினத்தார் கூறுகிறார்.

வில்லிற்கு விஜயன் மகான் அர்ச்சுனர் அருளிய ஆசி நூல்

அரங்கரைப் போல் ஞானிகள் இனிவருவது கடினம்

முற்காலங்களில் மக்களைக் காக்கும் பொருட்டு மன்னர்கள் பலவிதமான வேள்விகளை வளர்த்து, அந்த வேள்வியின் பயனால் மக்களைக் காப்பதை கூறுவர். அதுபோல மன்னர்கள் வெற்றி பெறுவதற்காகவும், பலவித யாகங்களும், வேள்விகளும் செய்து அதன் பயனாய் வெற்றி பெறுவார்கள்.


ஆனால் அரங்கமகாதேசிகர் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக தவமியற்றி, தவமே வேள்வியாகச் செய்தார். ஆறுமுகப் பெருமானின் அவதாரமாகத் தோன்றிய அன்னல் மகான் அரங்கமகாதேசிகர் தமது வாழ்வையும், தவ ஆற்றலையும் உலக மக்கள் நலனிற்காகவே அர்ப்பணித்து பிறருக்கு தர்மம் செய்வதையும், தவம் செய்வதையுமே வேள்வியாக வளர்த்து அதன் பயனையும் உலக மக்களுக்கு அளித்து இன்புறும் பேராசானாவார்.


அப்படி தன்னலமற்ற ஞானி அரங்கமகாதேசிகரை காணவும், அவருடன் பேசவும், அவரது கரம் நம்மீது படவும், அவரது பார்வை படவும், அநேகம் கோடி தவங்கள் நாம் செய்திருந்தாலன்றி அவ்வளவு எளிதில் முடியாது.


மாஆற்றல் பொருந்திய அரங்கமகாதேசிகரின் அறப்பணிகளுக்கு தொண்டும், பொருளுதவியும் இடைவிடாது செய்து அரங்கமகாதேசிகரினை முழுமையாக நம்பி, தம்மை அர்ப்பணித்து பணி செய்தால் அவர்கள் சித்தர் லோகத்தில் ஒருவராக மாறுவார் என்கிறார் மகான் அர்ச்சுனர்.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக தவமியற்றவும், தடைபடாத அறப்பணிகள் மூலம் தர்மம் செய்யவும், அதற்கு தேவையான எல்லா ஞானிகளின் ஆசியும், பெரும் ஆற்றல் பெறவும், அரங்கமகா தேசிகர் கடைப்பிடித்த கொள்கைகளே அரங்கமகா தேசிகருக்கு உறுதுணையாக இருந்தது. ஜாதி, மத, இன, மொழி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடற்று எல்லோரையும் ஒரு தாய் பிள்ளைகளாக எண்ணியதும், அவர்களிடம் பாரபட்சம் பாராமல் அன்பு காட்டியதும், தம்மை நாடியவர்களையும், தொண்டு செய்பவர்களையும் தம்மைப்போல் எண்ணி அன்பு காட்டியதாலும் இவ்வித பெருந்தவத்தையும், தருமத்தையும் செய்ய முடிந்தது. பொதுவாகவே ஒருவருக்கு ஞானம் பெற வேண்டுமாயின் சில அடிப்படை கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். 


இத்துறையின் அடிப்படை கொள்கையான தொண்டருக்கு வருகின்ற இன்பதுன்பம் தனக்கு வந்ததாக எண்ணி அவற்றை ஏற்றுக் கொள்பவராகவும், இதை வாழ்வின் இலட்சியமாக கொண்டவர்தான் அரங்கமகாதேசிகர்.


கிடைத்ததற்கரிய குருநாதன் கிடைத்தும் இனியும் காலம் தாழ்த்தாது திருவடி பணிந்து பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற வேண்டும்.


ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரின் அறப்பணிகள் எல்லையின்றி விரிவடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் ஐந்து நபர்கள், பிறகு பத்து நபர்கள், ஐம்பது நபர்கள், ஆயிரம் நபர்கள், பத்தாயிரம் நபர்கள் மேலாகவும் அன்னதானம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 2784 இலவச திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். குடிநீரில்லாத கிராமங்களுக்கு குடிநீர் அளித்துள்ளார். கண்சிகிச்சை முகாம்கள் நடத்தி கண்பார்வை அளித்துள்ளார்கள். இன்னும் சொல்ல சொல்ல இவை விரியும். இவ்வளவு அறப்பணிகளும் உண்மையும், அன்பும், பணிவும், முன்ஜென்ம தொடர்பும் உடைய தொண்டர்கள் உதவியினால்தான் செய்ய முடிந்தது.


இதுவே அவர்கள் செய்த தவப்பயன் என்பதை உணர்ந்து எக்காலத்தும் தொண்டரின் தொண்டினை மறவாமல் போற்றும் ஞானவானாக திகழ்கின்றார் அரங்கமகாதேசிகர்.

தலைவனே அவதாரமாக வந்துதித்தபோதும், சாதாரண தொண்டனிடத்தும் நேரிடையாக மனம்விட்டு பேசி அவனையும் மதித்து எந்த ஏற்றதாழ்வும் பார்க்காது அவரையும் தம்மைப்போலவே எண்ணி வாழ்த்தும் உயரியகுணமும், அன்பும் இவ்வுலகில் வேறெங்கும் எந்த சங்கத்திலும், எந்த இடத்திலும் காண இயலாது. அது ஓங்காரக்குடிலில் மட்டுமே காணமுடியும்.


அதை அரங்கர் மட்டுமே செய்ய முடியும். இதை வேறு யாராலும் செய்ய முடியாது. நன்றி மறவாமையை தன் உயிராக போற்றி பாதுகாப்பவர்கள் ஞானிகள் என்பது அரங்கரின் இச்செயல்களே சாட்சியாக கொள்ளலாம். அத்தகு ஞானியை, சற்குருவை முழுமையாக நம்பி தொண்டு செய்து வரவிருக்கின்ற பெரும் அறப்பணிகளில் தம்மை அர்ப்பணித்து ஞானிகளின் ஆசியும், அரங்கமகாதேசிகரின் ஆசியும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.

இனியொரு காலம் இப்படி வாய்ப்பு கிடைக்காது, அரங்கரைப் போல் ஞானிகள் இனிவருவது கடினம், அரங்கரைப்போல் தாயுள்ளம் எவருக்கும் இல்லை, அரங்கரைப்போல் அன்பு எவரிடமும் இல்லை. அரங்கனே தாயும், தந்தையும், சாமியும், தெய்வமும் ஆவார். விரைந்து வாரீர், பெற வேண்டியவற்றைப் பெறுவீர், என உலக ஆன்மீகவாதிகளை விரைந்து அழைக்கிறார் வில்லிற்கு விஜயனான மகான் அர்ச்சுனர்.

Wednesday, 19 October 2016

இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உடல் நிலையாமை

முருகா என்றால்,


இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உடல் நிலையாமை என்பன பற்றி அறிந்து உணரலாம்.



நாம் பெற்ற இந்த இளமை என்றும் நிலையானது அல்ல என்றும் இந்த இளமை காலத்தால் அழியக்கூடியது என்றும் அந்த இளமை உள்ளபோதே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை அறிவு முருகனருளால் நம்முள் தோன்றி இளமை உள்ளபோதே என்றும் மாறா இளமை கொண்ட அருட்கடவுள் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேரறிவும் ஆறுமுகனார் தம் திருவடிப் பற்றிட ஆர்வமும் முயற்சியும் உண்டாகி என்றும் மாறா இளமை பெற்ற அந்த ஆறுமுகனார் பெற்றிட்ட அந்த அற்புத வாய்ப்பை தாமும் பெறவேண்டுமென்ற ஞானஅறிவு தோன்றி ஆன்மாவினில் எழுச்சி உண்டாகி ஞானத்தேடலை தோற்றுவிக்கும். ஞானத்தேடலின் முடிவாக ஞானவான் முருகனே இதனை அளிப்பவனென்றும் அவனடிப் பற்றினாலன்றி அழியும் இளமையை அழியாமல் காக்க இயலாதென்பதனை உணர்ந்து என்றும் அழியா இளமையை பெற ஞானபண்டிதனின் ஆசியை பெற்றுயர முயற்சிகளை செய்வார் முருகனருள் பெற்றோர்.



செல்வம் என்பது ஓரிடத்திலும் என்றும் யாவரிடத்தும் நிலையாய் இருப்பதில்லை என்ற உண்மையை உணர்வார்கள்.



செல்வம் என்பது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள நாம் முன்சென்ம புண்ணியத்தால் நமக்கு கடவுளால் அளிக்கப்பட்ட கொடை என்றும் அந்த செல்வம் காலத்தால் நம்மைவிட்டு ஒரு நாள் சென்றுவிடும் என்றும், நிலையற்ற செல்வத்தை நம்முடனே நிலைப்படுத்த அந்த செல்வத்தை பயன்படுத்தி ஏழை எளியோர்க்கும், இயலாதோருக்கும் தரும அறப்பணிகளாய் செய்து நிலையில்லாத செல்வத்தை என்றும் மாறாத பிரபஞ்சமே அழிந்தாலும் அழியாது நம்மை தொடர்ந்து உடலை ஆன்மா மறந்து உடல்விட்டு உயிர் பிரிந்தாலும் ஆன்மாவை தொடர்ந்து வந்து மீண்டும் மீண்டும் பிறவிதோறும் நம்மை தொடரும் தரும ஆற்றலாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பெரும் சிறப்பறிவு முருகனை வணங்க வணங்க அவர்தம்முள் தோன்றும்.



தொடரும் தரும ஆற்றல் துணை கொண்டு நிலையற்ற செல்வத்தை நிலையான பெருஞ்செல்வமாம் முருகனருளாய் மாற்றியே முருகன் திருவடி திருத்தொண்டிற்கே ஒப்புவித்து முருகனருள் என்ற பெருஞ்செல்வத்தை பெற்று என்றும் மாறா அருட்செல்வமாம் முருகனருளை பெறுவதே இந்த செல்வத்தின் பயன் என்றுணர்ந்து ஆறுமுகனார் திருவடிக்கே யாம் பெற்ற செல்வமும் வாழ்வும் என்றே அவனது திருவடிக்கே சரணாகதியாகிடும் அற்புதமான ஞானமும் அவர் தம்முள்ளே தோன்றி ஆறுமுகனருளாலே ஆறுமுகன் திருவடிப்பற்றி செல்வத்தின் துணைகொண்டு திருப்பணிகள் செய்து திருவருள் பெற்று நிலையான பேரின்ப வாழ்வை பெற்றுயரும் வாய்ப்பினை முருகன் திருவடிக்கே சரணடைந்து பெற்றிடவும் வழிவகை செய்யும் முருகன் நாமமே என்றுணர்ந்து முருகன் திருவடி பற்றிட தூண்டிடும் முருகனின் பக்தியின் சக்தி. யாக்கை நிலையாமையாகிய இந்த உடம்பை பற்றிய உண்மை ஞானம் உண்டாகும். நாம் பெற்ற இளமையும், செல்வமும் நிலையற்றது என்றுணர்ந்து அப்பன் ஆறுமுகன் திருவடிக்கே சரணாகதி அடைந்திட அடைந்திட நாம் பெற்ற இந்த தேகமும் ஒரு நாள் அழிந்தே போகும். என்றும் அழியக்கூடிய இந்த தேகத்தின் உதவியால்தான் அழியாத தேகத்தை பெறமுடியும் என்றும் உணர்வார்கள்.




முருகன் அருளால் முருகனின் மீது செலுத்திய பக்தியின் ஆற்றலால் முருகநாமத்தின் சக்தியால் அவர் தம்முள்ளே அந்த முருகனே உண்மை அறிவை தூண்ட தூண்ட ஞானஅறிவின் தூண்டல்தனை பெற்ற அவரெல்லாம் அழியக்கூடிய இந்த தேகத்தின் உதவியால் அழியாததேகம் பெற்றிட என்றும் மாறா இளமையும், எல்லையில்லா பேராற்றலும், ஞானத்தின் தலைவனாயும் உள்ள ஞானபண்டிதனாம் முருகன்தான் நம்மைச் சார்ந்து அழியும் இந்த தேகத்தை அழிவற்ற ஞானதேகமாக தோற்ற தேகமான இந்த தூலதேகம் சார்ந்து கசடு நீக்கி அழியும் தேகத்தை அழியாத ஒளி பொருந்திய சூட்சும தேகமாக மாற்றிடுவான் என்றுணர்ந்து அந்த ஆறுமுகனார் வருகைக்காக இந்த மும்மலக் குற்றமுடை கசடான இந்த தேகம் கடைத்தேறிட அளவிலா பக்தியையும் அளவிலா தர்மத்தையும் செய்திட முனைந்து ஞானவழிதனிலே அவனருள் பெற்று சென்றிடுவார்கள் முருகனருளால்.



முருகன் அருள் கூட கூட ஒரு காலத்திலே முன்செய்த தருமமும் தொண்டும் உடன்வர முருகன் அருள் துணைபுரிய முருகனே தயவாய் மாறியே தேகம்தனை மாற்றி ஒளிதேகம் தந்திட பிறவா நிலையும் பெற்றுயர்வார்கள் முருகன் பக்தியின் ஆற்றலினால்.



இளமை நிலையாமை உணர்ந்து காலம் உள்ளபோதே முருகனை பூசித்தும் தொண்டுகள் செய்தும் செல்வம் உள்ளபோதே தர்மங்கள் செய்து அழியா அருள் செல்வத்தையும் என்றும் அழியா புண்ணியத்தையும் பெற்று அழியக்கூடிய இந்த தேகத்தை அழியாத தேகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற உண்மை பேரறிவு முருகபக்தியால் மட்டுமே பெறமுடியும்.




முருகா முருகா முருகா என்றே மனம் உருகி போற்றிடுங்கள் முருகனை. முருகனருளால் முருகனாக உணர்ந்து முருகனாகவே ஆகிவிடலாம் முருக பக்தியினாலே!



முருகன் திருவடியை போற்றுவோம்!
முக்தியும் சித்தியும் பெறுவோம்!
வாழ்க முருக நாமம்! வளர்க முருகன் புகழ்!!
அனைத்துமானாய் நீயேயாய் முருகா! வந்ததும் நீயே தந்ததும் நீயே! வாழ்வதும் நீயே!
வாழவைப்பதும் நீயே!
எல்லாமும் ஆனாய் எம்பெருமானே!
காப்பாய் எம்மை கருணைக்கடலே!
கடைத்தேற்றுவாய் அருள் தயவே!
உமதடிக்கே எம்மை ஆளாக்கிடுவாய் அருட் கருணையே!
உண்பதும் உடுப்பதும் நீயே ஆவாய்!
நாடுவதும் தேடுவதும் நீயே ஆவாய்!
கூடுவதும் குழைவதும் நீயே ஆனாய்!
உண்மை உரைப்பதும் நீயே ஆனாய்!
உத்தமனாய் ஆக்குவதும் நீயே ஆவாய்!
உன்னடி பற்றிட உறுதுணை நீயே ஆவாய்!
சிந்தையும் நீயே ஆவாய்!
செயலும் நீயே ஆவாய்!
சொல்லும் நீயே ஆவாய்!
சொல்ல வைப்பதும் நீயே ஆவாய்!


எல்லாமும் ஆகியே எம்மை ஆட்கொண்டருள் எம்பெருமானே முருகா! முருகா! முருகா! ஞானபண்டிதா! சற்குருவே! தயாநிதியே! தற்பரமே! பொற்பதமே! காத்தருள் புரிவாய் அன்பே! ஆறுமுகனே என்று போற்றிடுங்கள் முருகனை! பெற்றிடுங்கள் பேரின்ப லாபத்தை! கந்தன் என்றபோதே வந்தேன் என்றருள்வான் முருகன்! விடாதீர்கள் முருகனை! ஓடும் முருகனை உண்மை உள்ளன்பால் பிடித்து வையுங்கள்! சொல்லுவோம் முருகன் நாமத்தை! வெல்லுவோம் வேற்படை கொண்டு வினைகளை!

-சுபம்-


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html