ஞானிகள் பூசை இல்லையேல் அரங்கன் திருஅருள் இல்லையேல் அரங்கனின் குருஅருள் இல்லையேல் ஞானசித்தி இல்லை!!!
காலனாம் எமனையும் வென்று காக்கும், மரணம் வெல்ல வல்லதொரு அதிஅற்புதமான கருணைமிகக் கொண்ட சக்திதான் அரங்கா உமது சக்தி. அது தருமத்தின் சக்தியாகும். சக்தி மிகுந்த தருமச்சக்கரம் தனைக் கொண்டு உலகைக் காக்கின்ற அரங்கர், தர்ம சக்கரத்துடன் கடைத்தேற்றவல்ல தூயநெறியாம் சன்மார்க்க நெறி என்கின்ற ஜீவதயவாய் ஆனதொரு தூயநெறிமுறையையும் உலகிற்கு அளித்து கடைத்தேற்றி ஞான வாழ்வளித்து காக்கின்ற சக்தி மிகக்கொண்ட இவ்வுலகின் மகாஞான குருநாதனே அரங்கனாவார். உத்தமமகா ஞானி கலியுக காவல்தெய்வம், யுகமாற்ற தலைவன் அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிகரின் திருவடிகளிலே உடல், பொருள், ஆவி என்றே அனைத்தையும் சரணாகதியாக்கியே உளமார சரணடைந்தோர்க்கெல்லாம் அற்புத ஞானி அரங்கனின் அருள்வேலி காக்கும்.
அற்புத அருள்வேலி அன்பர்தமை இடையறாது காத்து அவர் தமக்கு மரணகண்டங்களிலிருந்து பாதுகாப்பு நல்கி கடன் தொல்லைகளிலிருந்து விடுவித்து கவலை துன்பம் அணுகாது காத்து பிணி வென்று சுகமளித்து காத்து இரட்சிக்கும் அரங்கனின் அருள் சக்தி.
ஒவ்வொரு நாளும் அரங்கன் தம் திருவடிகளை மறவாமல் அவரவர் இல்லங்களிலே தவறாமல் பூசித்திடல் கட்டாயமாகும். அரங்கனின் திருவடிகளை மானசீகமாக மனக்கண்ணிலே நிறுத்தி குளிர்ச்சி பொருந்திய, ஒளி பொருந்திய ஞானமளித்து விதி மாற்றம்தனை செய்து அன்பரை கடைத்தேற்றக்கூடிய தேவர்க்கும் மூவர்க்கும் எட்டா அந்த புனிதத் திருவடிகளை ஆறுமுகனார் அவதாரத் திருவடிகளை அவரவரும் அவர்தம் கண்ணீரால், கண்ணீர் மலர் கொண்டு, மனமுருகி அவரவரும் தம்தம் எண்ணி வருந்தி குற்றங்களுக்கு வெட்கி அந்தரங்கத்திலே அரங்கர் திருவடிக்கு சமர்ப்பித்து மன்னிப்பு கேட்டு தம்தம் நிலைதனை அவரும் உணரும் வகையிலே மனஇளக்கம் கொண்டு இறையாம் அரங்கரிடத்து அந்தரங்கத்திலே பூசைதனிலே பொய்யின்றி உளமார உண்மையுடன், மன்னிப்பு கோரியும் அரங்கரின் அற்புதங்களை, புகழை, பெருமைகளை மனதார உணர்ந்து போற்றி துதித்து அண்ணல் அரங்கரை அவர்தம் உண்மை சொரூபமாம் ஞானசோதி சுயம்பிரகாச அருள்ஞான வள்ளல் யோகானந்த ஞானானந்த சதாசிவ சாந்தசொரூப ஞானத்தலைவன்
முருகப்பெருமானாக எண்ணியே அன்பர் புறக்கண் தோற்றத்தில் கண்டிட்ட அரங்கரின் உருவம் கண்டு ஏமாறாது பிரம்மாண்ட சோதி பெருஞ்சுடராய் தோன்றும் ஒளி பொருந்திய அரங்கர் தம்மை மனதினில் இருத்தி கண்ணீர் மல்க மல்க நெஞ்சம் உருக உருக தவறுகளை உணர்ந்து உணர்ந்து மன்றாடி மன்னிப்பு கோரி வெட்கி வணங்கி அவர் திருமுன் மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களும் கருவிகளும் ஒடுங்கிட மனசலனமின்றி வாய்புதைத்து மனம் பரிதவித்து வணங்கி வணங்கி அரங்க நாமம்தனை நாதழும்பேற அரங்கா அரங்கா என்றே அரற்றி கூறி ஆன்மா சோர அரங்கர் அருளை பெறவே மன்றாடி நின்றிடல் வேண்டும்.
அங்ஙனமே உளம் உருகி மன்றாடி நிற்கும் உண்மை பக்தராம் அன்பர் தமக்கு அவர்தம் ஆசைகள் அரங்கரின் அருளால் நிறைவேற்றப்படும். அந்த அன்பர் தமக்கு மட்டுமன்று அவர்தம் குடும்பத்தினருக்கும் அவரது பூஜா பலன்களாலே அவையனைத்தும் அருளப்படும்.
அண்ணல் அரங்கர் வாழும் ஞானஆலயமாம் ஓங்காரக்குடில் தனிலே சமைக்கப்படுகின்ற உணவு சாதாரண பசியை போக்குகின்ற உணவு மட்டுமன்று. அது ஞானிகள் அருளாசிகளினாலே சமைக்கப்படுகின்றதனாலே அருள்நிறை அருளமுதாகும். அருளமுதாம் குடில் உணவு ஆயுள்தனை விருத்தி செய்து காக்கும் அமுதத்திற்கு ஒப்பான உணவாகும்.
அதுவே பிணி தீர்க்கும் அருமருந்தாகும். ஓங்காரக்குடில் நாடி வந்து ஆங்கே தொண்டுகள் பொருளுதவிகள் செய்து தங்கி அரங்கரின் அன்பிற்கு வசமாகி ஆங்கே ஞானிகளருளால் சமைக்கப்படுகின்ற அருள் உணவை மனமார உண்டு செல்கின்ற அவரவர்க்கும் அவர்கள் மேற்கொண்ட செயல்களிலெல்லாம் செயல் வெற்றி பெறுவதோடு அவர்கள் மனதினுள் எண்ணிய எண்ணங்களில் வெற்றியும் பெற்று அவர் தம்மை அரங்கன் அருளும் ஆசிகளும் உடனிருந்து காக்கும்.
ஞானத்தலைவனாம் முருகப்பெருமானின் சக்தியை முழுமையாகக் கொண்ட உத்தம மகாஞானயோக வள்ளல் ஞானி அரங்கமகா தேசிகரின் வல்லமைகளை குறைத்து எண்ண வேண்டாம். அவரவர் செய்திட்ட வினைகள் காரணமாகவே அரங்கனை அவர்தம் ஆற்றலை, அவர் தன்மையை பார்க்கவோ, கேட்கவோ, சிந்திக்கவோ, அறியவோ, எண்ணவோ, உணரவோ முடியவில்லை. இது அவரவர் செய்திட்ட வினையினால் வந்திட்ட குற்றமே அன்றி அரங்கர்பால் தவறில்லை. ஆற்றல்மிகு அருள்ஞானி அரங்கரின் அருளொளியை, அற்புதத்தை கருணையை உணருகின்ற வாய்ப்பு அன்பர்தம் பாவத்தால் காணமுடியவில்லையே தவிர அரங்கரின் ஆற்றலில் உள்ள குறையன்று.
ஆதலின் அரங்க தரிசனம் பெறுதல் அவசியமாகும். அரங்க தரிசனம் சாபவிமோசனம் அன்றி அரங்கரின் சக்தி மீதோ அரங்கரின் செயல் மீதோ அரங்கரின் தோற்றம் மீதோ சந்தேகம் கொண்டு அரங்கதரிசனம் தனை அடையாது, அரங்கர் தொண்டுகள் தமை செய்திடாமல், “அவரவரும் இக்கலியுகத்திலே நெறிக்குட்பட்டு தொண்டு செய்து கடைத்தேறுதற்கு கிடைத்திட்ட ஒரே வாய்ப்பான குடில் தொண்டை மனமுவந்து செய்திடாமல் ஏமாந்து போய் வீணாய் போகாதீர்கள்”. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தொண்டுகள் செய்திட அரங்கன் மகாமகா கருணை கொண்டு அருளிய வாய்ப்பை உங்கள் கடைத்தேற்றத்திற்காக உண்டான வாய்ப்பை கண்டிப்பாக நழுவவிடாதீர்கள், நழுவவிட்டால் பின்னர் கிடைக்காது.
உலகப்பெருமாற்றம் விரைந்து அருகில் வருகிறது, வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கவனமுடன் விழிப்பாக இருங்கள், ஏமாந்து விடாதீர்கள். அவரவர்க்கு கிடைத்திட “ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்” வாய்ப்பை நழுவவிடாது யாவரும் பெற்று பயனுற வேண்டும் என்பதினாலே உங்கள் மீது கருணை கொண்டு சொல்கின்றேன் குருராஜன் யானும் சொன்னேன்.
தயவே வடிவான ஞானஜோதி அரங்கமகா தேசிகரே இவ்வுலகை கலிகால இடர்களிலிருந்து காத்து மீட்டு இரட்சிக்க வந்திட்ட நல்ஞானி ஆவார். அவர்தம் தொடர்பினின்று எந்த சூழ்நிலையிலும் விலகிடாதீர். ஞானிகள் பெருமை உரைத்து ஞானிகள் திருவடியைப் பற்றிட ஏதுவாய் நடக்கின்ற ஞானிகள் கலந்து அருளாசிகள் செய்கின்ற ஞானயோகி அரங்கனால் நடத்தப்படுகின்றதுமான ஓங்காரக்குடில்தனிலே நடக்கின்ற ஞானிகள் பூசைகளிலே தவறாது கலந்து கொள்பவர்களுக்கே ஞானியர்களின் சூட்சும அருள் கிடைக்கப்பெற்று ஞானசித்தி எட்டும் என உறுதியாக கூறுகிறேன் என்கிறார் மகான் குருராஜர்
No comments:
Post a Comment