ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே!
உலகில் பலபேர் ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென பல வழிகளில் முயற்சி செய்து பலவிதமான நபர்களை சந்தித்து அவர்களால் தமக்கு வழிகாட்ட முடியுமா? என அவர்களை நாடி இறுதிவரை தெளிவு பெறாமல் அவரவர்களுக்கு தெரிந்தவரையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ, எதைஎதையோ கற்றுக் கொண்டு உண்மை ஆன்மீகம் பற்றியும், உண்மை வழிகாட்டியான குருநாதரைப் பற்றியும் தெரியாமல் தடுமாறி, தாங்கள் ஆன்மீகத்துறையில் முன்னேறி வருவதாக தாங்களாகவே கற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மேல் குற்றமில்லை.
இவர்களில் தர்மசிந்தனையுடன் தான தர்மங்கள் செய்பவர்களும், உண்மையான பக்தி விசுவாசத்துடனும், யாருக்கும் தீங்கு நினைக்காமல் இறைவனை மனமார பூஜித்தும் வருகிறவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களது ஆன்மீக வழிகாட்டியாக உள்ளவர்கள் சரியில்லாததால் இவர்கள் தடம்மாறி சென்று ஆன்மீகத்தில் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் உண்மை குருவை தேடிக் கண்டுபிடித்து அக்குரு உபதேசம் பெற்று அவர் கூறும் வழிகளைப் பின்பற்றினால் அவர்கள் இனிப்பிறவா நிலையையும் அடையலாம். இவர்கள் உண்மைகுரு யாரென்று தமக்குள் ஒரு கருத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது என்னவெனில் குருவானவர் காட்டில் ஆசிரமம் வைத்திருப்பார்கள், அங்குள்ளவர்கள் எல்லோரும் காவி உடை தரித்து முனிவர்களாக இருப்பார்கள், அங்கு பெண்களே இருக்க மாட்டார்கள், அவர்கள் உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு யாரையும் சந்திக்காமல் இரகசியமாக வாழ்வார்கள், பொதுமக்களை சந்திக்க மாட்டார்கள். இரகசிய பூஜைகள், இரகசிய மந்திரங்கள் செய்வார்கள், ஜடாமுடி தரித்திருப்பார்கள், தாடி வைத்திருப்பார்கள், அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்தால் அவர்களைச் சுற்றி புற்று வளரும் அளவிற்கு தவம் செய்வார்கள், யாருடனும் பேச மாட்டார்கள், உடம்பெல்லாம் விபூதியோ திருமண்ணோ தரித்திருப்பார்கள், அவர்கள் உக்கிரமான பக்தி வசப்பட்டு ஆடுவார்கள் என்றெல்லாம் பற்பல கற்பனைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு இந்த உலகிலும் காடுகளிலும் தேடி அலைந்து இன்றுவரை யாரும் உண்மை குருநாதரை கண்டுபிடித்ததாக தெரியவில்லை.
உண்மையில் ஞானிகள் அப்படி மனித சமுதாயத்தை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். மக்களோடு மக்களாகவே சமுதாயத்தில் தொழில் செய்து கொண்டே, இறைவனை பூஜித்து வெளியே அடையாளம் தெரியாமல் இயல்பான வாழ்க்கையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் வீண் ஆரவாரம் இருக்காது, பொய் பேசமாட்டார்கள், ஜடாமுடியும் தாடியும் இருக்காது, பொய்வேடம் போடமாட்டார்கள். அவர்களது செயல்பாடுகளினால்தான் அவர்களை அடையாளம் காண முடியுமே தவிர தோற்றத்தினால் அடையாளம் காண முடியாது.
மகான் அகத்திய முனிவர், திருமூலர் போன்றோர் ஜடாமுடி தரித்து உருத்திரம் அணிந்து, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருப்பது போல் அடையாளம் காண்பிக்கப்பட்டு இருப்பது, அது தத்துவ விளக்கங்களேயாகும்.
அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவர் திருவடி பணிந்து பணிந்து அவர் செய்யும் அறப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் கலந்து கொண்டு தொண்டு செய்தால் குடிலாசான் ஆசியினாலும் மகான்களின் ஆசியினாலும் துயரண்டாத வாழ்வும், நற்செல்வமும், புகழும், கீர்த்தியும், நற்பண்புகளும் வாழ்வில் நினைத்ததை முடிக்கும் வல்லமையும், மனிதருள் மேன்மையான நிலையும் சிறந்த இடத்தையும் பெற்று மரணமில்லா பெருவாழ்வையும் இறுதியில் பெறலாம். இக்கலியுகத்தில் தற்போது ஞானி என்ற சொல்லிற்கு, ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே. அவரே முற்றுப்பெற்ற ஞானி, அவரை அடைந்து ஆசி பெற்றால் அனைத்தும் விளங்கும். ஞான சூட்சுமங்கள் படிப்படியாக தெளிவடையும், உண்மை புரியும் என மகான் பட்டினத்தார் கூறுகிறார்.
No comments:
Post a Comment