பாவம் தீராமல் வாசி நெறி பற்றி நாம் அறிய முடியாது. வேண்டுமானால் பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கலாம். பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்வதெல்லாம் ஏதோ மன ஆறுதலே தவிர, அது பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியாது. இது பற்றிக் கேட்டால் நீங்கள் என்ன நாத்திகவாதியா என்று கேட்பார்கள்? அப்போ பாவத்தை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
- மகான் கொங்கண மகரிஷி - 12.
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
- மகான் கொங்கண மகரிஷி - 12.
தானென்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் - கொடும் பாவம் இருக்கும் வரையில் எதை எடுத்தாலும் சந்தேகம் வரும். இந்த கருத்தே உங்களுக்கு சந்தேகமாக இருக்கும்.
மோட்சம் தருபவன் ஆசான்தான். மனிதன்தான் தெய்வமாகிறான். மனிதன் நிலை உயர்ந்தால் தெய்வமாகிறான். மற்றதெல்லாம் தெய்வம் இல்லையென்று உணர்கின்ற பரிபக்குவம் எவருக்கு உண்டோ அவர்தான் ஞானியாகின்றான். இந்த உலகத்தில் தோற்றமாகின்ற தெய்வங்களெல்லாம் மேலான ஒரு பொருள் உண்டு. அதை அறிகின்ற மக்கள்தான் ஞானியாக முடியும்.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 520.
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 520.
மாபெரும் யோகிகளுக்கு, ஊழ்வினை அற்றவர்களுக்கு, பண்புள்ள மக்களுக்கு, சிறந்த அறிவாற்றல் உள்ள மக்களுக்குத்தான் இதை சொல்ல முடியும். இதை மற்றவர்களுக்கு சொல்ல முடியாது.
இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலா மிறையையே.
- மகான் சிவவாக்கியர் பாடல்கள் - கவி எண் 186.
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலா மிறையையே.
- மகான் சிவவாக்கியர் பாடல்கள் - கவி எண் 186.
ஞானமான பள்ளி எது? எந்த மந்திரம் சொன்னால் என்ன ஆகும்? காற்று போனால் மந்திரம் போச்சு.ஞானமான பள்ளி என்பது புருவமத்தி. இங்கே இடகலை என்று சொல்லப்பட்டது பெண் கலை. வலது கலை ஆண் கலை அல்லது சூரியகலை. இரண்டையும் எங்கே சேர்க்க வேண்டும்? புருவ மத்தியில் சேர்க்க வேண்டும்.
தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்தவருண் மோன வள்ளலையே - நித்தமன்பு
பூணக் கருது நெஞ்சு; போற்றக் கரமெழும்பும்;
காணத் துடிக்குமிரு கண்.
- மகான் தாயுமானவர் - உடல் பொய்யுறவு - கவி எண் 29.
வைத்தவருண் மோன வள்ளலையே - நித்தமன்பு
பூணக் கருது நெஞ்சு; போற்றக் கரமெழும்பும்;
காணத் துடிக்குமிரு கண்.
- மகான் தாயுமானவர் - உடல் பொய்யுறவு - கவி எண் 29.
அகத்தியர் தத்துவம் முந்நூறு என்ற ஒரு நூல் உள்ளது. அதை பூரணமாக படிப்பதென்றால், படித்து அதன் பொருளை அறிவதென்றால், சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆகும். இந்த பதினான்கு ஆண்டுகள் என்ன செய்ய வேண்டும்?
மகான் தாயுமானசுவாமிகள் வகுத்தது போல், எவனொருவன் உண்மைப் பொருள் உணர்ந்தானோ, அந்த அகார உகார இரகசியத்தை அறிந்தானோ, அவன் பாதத்தைத் தொடர்ந்து பூசித்தால் அது போதும். தத்துவத்தை படித்து காலத்தை வீணாக்காதே!
உண்மை ஆன்மீகத்தை அறிய ஓங்காரக்குடிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் அவதாரம் சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமாதேசிக சுவாமிகள் அவர்களிடம் திருவடி பணிந்து சரணடையுங்கள்!