முருகா என்றால்:
முருகப்பெருமான்தான் ஞானத்தலைவன் என்பதை அறியலாம். முருகனது ஆசி பெற்றிட உகந்த வழியும் புலப்படும். தினசரி மறவாமல் அதிகாலை 4.30 மணிக்குள் எழுந்து முகம் கழுவி காலைக் கடன்களை முடித்துவிட்டு முடிந்தால் குளித்துவிட்டும் இயலாவிட்டாலும் பரவாயில்லை அவரவர் வீட்டினிலே பயபக்தியுடன் வீழ்ந்து வணங்கி ஒரு அடிக்கு மிகாத உயரத்திலே ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி வைக்க வேண்டும்.
தீபம் ஏற்றும்போதே
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று
தொடர்ந்து ஆறுமுறையேனும் கூறி தீபம் ஏற்ற வேண்டும்.
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று
தொடர்ந்து ஆறுமுறையேனும் கூறி தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றி தீபத்தின் முன் தீபத்தினிலே அருள்மிகு ஆறுமுகனான முருகப்பெருமானே தோன்றி ஜோதி வடிவமெடுத்து நமக்கு விளங்குவதாய் எண்ணி ஜோதிதனை முருகப்பெருமானாய் பாவித்து வீழ்ந்து வணங்கி பின் எழுந்து சரவண ஜோதியின் முன் அமர்ந்து பயபக்தி விசுவாசத்துடன் பணிந்து ஜோதியே முருகனின் தோற்றமாய் தம்முன் முருகன் தோன்றி அமர்ந்திருப்பதாக பாவித்து,
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”ˆ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
என்று மனம் ஒன்றி தொடர்ந்து 1008 முறைகள் கூறிவர வேண்டும்.
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”ˆ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
என்று மனம் ஒன்றி தொடர்ந்து 1008 முறைகள் கூறிவர வேண்டும்.
இவ்விதம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1008 முறையேனும் மந்திரம்தனை ஜோதியேற்றி சரவணஜோதி வழிபாடுதனை பக்தியுடன் செய்து வரவர, செய்கின்றோர்க்கு உண்டான துன்பங்கள் நீங்கி அவர் வாழ்வினிலே அவர் தம்மைப் பற்றிய பொருளாதார பிரச்சனைகள் நீங்கி வாழ்வின் வறுமை ஒழியும். வழிபாடு செய்வோர் அசைவ பழக்கம் உள்ளவராக இருந்தால், அவர் உண்ணும் உணவு உயிர்க்கொலை செய்த பாவத்தால் வந்தது, இது பாவச்செயலாகும் என்று உணர்ந்து அசைவ பழக்கத்திலிருந்து விடுபடுவார், சுத்த சைவ உணவு பழக்கத்தை மேற்கொள்வார், தீய நட்புகள் விலகி தகுதியுள்ள நட்புகள் அமையப் பெறுவார்கள், பூஜையை தொடர்ந்து செய்திட ஏதுவான சுகாதாரமான அமைதியான சுற்றுபுறமும் பூஜைக்கு ஏற்ற தக்க சூழ்நிலையும் அமைந்து மனம் ஒன்றி பூஜை செய்திட ஏதுவான சூழ்நிலை அமையும்.
தொடர்ந்து சரவண ஜோதி பூஜைதனை மந்திர ஜெபம் செய்யசெய்ய யோக அறிவு உண்டாகி யோகத்தினை செய்வதற்கான தகுதிகளும் பெருகி யோகத்திற்கான செய்முறைகளும் முருகன் அருளால் அவர் தமக்கு உணர்த்தப்படுவதோடு அவரது புண்ணியபலமும் ஆன்மபலமும் பெருகி அற்புதமான சுகமான வாழ்வைப் பெற்று உயரலாம் என்பதை அறிவார்கள்.
No comments:
Post a Comment