திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள்
கருணை கொண்டு 09.06.2011 அன்று அருளிய ஆன்மீக உபதேசப் பேட்டி பேட்டி கண்டவர் - திரைப்பட இயக்குநர் திரு. யார் கண்ணன்
யாரொருவன் காமத்தை வென்றானோ, அவன்தான் குரு. காமம் என்பதற்கு காரணம் மும்மலக்குற்றம். மல ஜல சுக்கிலம் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்று சொல்வார்கள். ஆணவம், கன்மம், மாயை என்றால் புரியாது. ஆண்களுக்கு மல, ஜல, சுக்கிலம். பெண்களுக்கு மல, ஜல, சுரோணிதம். இந்த மூன்றுதான் மும்மலக்குற்றம்.
மும்மலக்குற்றம்தான் ஒரு மனிதனுக்கு மாயையை உண்டு பண்ணும். இதை ஜெயிக்க வேண்டும். அதை எப்படி ஞானிகள் செய்கிறார்களென்றால் உடம்பைப் பற்றி அறிவாங்க, உடம்பு முன்னே வந்ததா? உயிர் முன்னே வந்ததா? என்று கேட்பார்கள்.
உடம்பும், உயிரும் சேர்ந்துதான் வந்தது. எப்படி வந்தது என்று கேட்டான். ஒரு பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது சிந்தனையாக இருந்தான். அப்படி கூடும்போது சுக்கில சுரோணிதமாக மாறுவான். சுக்கில சுரோணிதமாக மாறும்போது பத்து மாதம் தீட்டு வெளியாகாமல் இந்த கரு உற்பத்தியாகும். கரு உற்பத்தியானவுடன் இந்த உடம்பு என்ன செய்யும்?
இந்த தேகம் அசுத்த தேகம், பத்து மாதம் தீட்டும் அசுத்தம், சுக்கிலமும் அசுத்தம். பெண்ணுடலின் சுரோணிதமும் அசுத்தம். இதன் காரணமாகத்தான் மாசு இருக்கும், மனமாய்கை இருக்கும்.
இந்த மாய்கையை வெல்வதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. எப்படி வெல்கிறார்கள் என்று கேட்டால், இடது பக்கம் வருகின்ற சந்திர கலையையும், வலது பக்கம் வருகின்ற சூரிய கலையையும் சேர்த்து புருவ மத்தியில் செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தினால் உள்ளே உடம்பில் கனல் ஏறும். உள்ளே கனல் ஏற ஏற ஏற இந்த மும்மலக் குற்றங்களெல்லாம் விலகிப் போகும்.
மும்மலக் குற்றம் விலகினால் மனதில் தெளிவான அறிவு உண்டாகும். தெளிவான அறிவு உண்டானால், அவனுக்கு நரை திரை இருக்காது. அவர்கள்தான் ஐந்தொழிலையும் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஐந்தொழில் செய்யும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அவர்களைத்தான் வணங்க வேண்டும். அவர்கள் யாரென்றால் திருஞானசம்பந்தன், திருமூலதேவன், காலாங்கிநாதர், போகமகாரிஷி, அருணகிரிநாதர், அகத்தீசர், ஆசான் ஞானபண்டிதன். அவர்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.
ஏன் மனிதன் சாக வேண்டும்? சாவதற்கு உடல் குற்றமா? உயிர் குற்றமா? உடல் குற்றமும், உயிர்குற்றமும் சேரும்போது மனமாசை உண்டுபண்ணும். மாய்கையை உண்டு பண்ணும். அப்போ மும்மலக் குற்றத்தை நீக்கினவன் எவனோ? அவன்தான் ஞானி. அப்படி மும்மலக்குற்றத்தை நீக்கிய முதல் தலைவன் ஆசான் சுப்பிரமணியர்தான்.
ஆசான் சுப்ரமணியருடைய சீடர்தான் அகத்தீசர். அவர்தான் ஊர்ஊராக சென்று ஒன்பது கோடி மானுடர்களை ஞானியாக்கியவர். அவர்தான் உலகத்திற்கே தலைவர். அவருடைய ஆசியில்லாமல் ஒருவரும் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொன்னாலே அவன் குற்றமற்றவன். மும்மலக் குற்றம் அற்ற உடனேயே காமம் அற்றுப்போகும். காமம் அற்றவுடனேயே பசியற்றுப் போகும். பசியற்றவுடன் நரை திரை மூப்பு இருக்காது, பரிணாம வளர்ச்சி இருக்காது. பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் மும்மலக் குற்றமே.
மும்மலக்குற்றமுள்ள தேகத்திற்கு பரிணாம வளர்ச்சி உண்டு. ஆனால் இந்த உடம்புக்குள்ளேயே சூட்சும தேகம் ஒன்று இருக்கிறது. அந்த தேகத்திற்கு நரை திரை மூப்பு கிடையாது. அவன் குரு. அப்படிப்பட்ட குருநாதரை வணங்கனும். எப்படி வணங்கவேண்டும்?
திருஞானசம்பந்தரை வணங்கினாலும் சரி! ஆசான் அருணகிரிநாதரை வணங்கினாலும் சரி! ஆசான் பதஞ்சலி முனிவரை வணங்கினாலும் சரி! எல்லாமே ஒரே தன்மையுள்ளவர்கள்தான். இத்தனைபேரும் எப்படி முன்னேறினார்கள்? அத்தனைபேரும் ஆன்மாவைப் பற்றி அறிந்து கொண்டார்கள். ஆன்மா இந்த உடம்பில் இருக்கும்போது, ஏன் மாசுபட்டதென்றால், உடல் மாசு காரணமாக உயிர் மாசு வந்தது.
உடல் மாசு என்றால் என்னவென்று கேட்டான்? மல, ஜல, சுக்கிலம். மல, ஜல, சுக்கிலம் எப்படி வந்தது? பசி. பசிக்கு என்ன காரணமென்று கேட்டான்? மூச்சுக்காற்றின் இயக்கம். நாளொன்றுக்கு 21,600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றே பசிக்குக் காரணம். பசிக்கு உணவு தந்தால் அது சத்து அசத்தைப் பிரிக்கும். அசத்தாகிய மல, ஜலத்தை வெளியே தள்ளும். பிறகு 72000 நாடி நரம்புகளை முறுக்கேற்றும். அப்படி முறுக்கேற்றினால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் வேலை செய்யும்.
பிறகு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தகரணங்களும் வேலை செய்யும். ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து இதெல்லாம் தத்துவங்கள். இந்த உடம்பு என்பது காமதேகம். இந்த காமதேகத்திற்கு காரணம் மும்மலக் குற்றம்தான். மும்மலக்குற்றத்தை ஆசான் துணை கொண்டு மூலக்கனலை எழுப்பினால், மும்மலக்குற்றம் அற்றுப்போகும். மும்மலக்குற்றம் அற்றுப்போகும்போது அவன் மரணமிலாப் பெருவாடிநவை பெறுவான். அப்படி பெற்றவன்தான் குரு. இது போன்ற வாய்ப்பை பெற்றவர்கள் நவகோடி சித்தர்கள். அதில் ஆசான் அகத்தீசர்தான் முதன்மையானவர். இதற்கெல்லாம் தலைவன் ஆசான் ஞானபண்டிதன். உலகத்திற்கே தலைவன் முருகன்தான். ஆசான் ஞானபண்டிதன் ஆசியில்லாமல் முடியாது. முருகா என்று சொல்வதற்கே மூன்று கோடி தவம் செய்திருக்க வேண்டும்.
“முருகா எனவோர்தர மோதடியார்
முடிமேல் இணைத்தாள் அருள்வோனே”
என்று சொல்கிறார் ஆசான் அருணகிரிநாதர்.
முடிமேல் இணைத்தாள் அருள்வோனே”
என்று சொல்கிறார் ஆசான் அருணகிரிநாதர்.
முதற்தலைவன் சுப்ரமணியர். அவரை வணங்கினாலும் குருவின் ஆசியில்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொல்லப்பட்டவன் மும்மலக்குற்றம் அற்றவன். பொருள் பற்று அற்றவன், ஜாதி துவேசம் அற்றவன். உண்மைப் பொருள் தெரிந்தவன். எதையும் செய்வான். ஆணைப் பெண்ணாக்குவான். பெண்ணை ஆணாக்குவான். எல்லா வல்லமையும் அவர்களுக்கு உண்டு. அவர்கள்தான் குரு.
No comments:
Post a Comment