Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 22 April 2018

அஞ்சேல் என அருள் புரியும் அகத்தியர்

அகத்தீசா என்றால் :



அகத்தீசா! அகத்தீசா! என்ற முதுபெரும் ஞானத்தலைவன் அகத்தீசன் அருள்கூடி வணங்குவோர் தம் குறைகள் படிப்படியாக விலகி ஞானம்தனின் தன்மையுணர்ந்து ஞானவழி சென்று கடவுள் இன்பத்தை நுகர்வான் பக்தன். தான் பெற்ற அந்த கடவுள் இன்பத்தை நல்வழியை பிறரும் அறிய வேண்டுமென்றே மனம் விரும்பி பிறரும் அகத்தீசன் திருவடி பற்றிட தூண்டுவான் அகத்தீசன் அருளால்.

அகத்தியரை வணங்க வணங்க அகத்தீசனை வணங்காதோரும் வணங்கிட தூண்டும் அவனுக்கு. மக்களிடம் குறைகள் இருப்பது இயல்பே, அது அவரவர் செய்திட்ட பாவத்தினால் வந்தது அது. அகத்தீசனை வணங்கவணங்கதான் தீரும் என்பதை உணர்ந்து அவர்தம்மை அகத்தீசன் திருவடிக்கே ஆளாக்கிடவே அன்பர்குறை கூறல் தவிர்த்து அவர்தம் நன்மைகளை புகழ்ந்து கூறி அவர்தம்மை மகிழ்வித்து பிறகு நயமாக அவர் தம்மிடம் உள்ள ஞானம் அடைய தடையான குணக்கேடுகளை மென்மையாக சுட்டிக் காண்பித்து அக்குணக்கேடுகளை நீக்கிக் கொள்ள இன்முகத்தோடு அறிவுறுத்துவான் அகத்தீசன் பக்தன். 


இவ்விதமே அகத்தீசனை வணங்கிய பக்தன், தான் வணங்கியதோடு பிறரையும் அகத்தீசனை வணங்கிட தூண்டி தூண்டி தனது குணப்பண்பினால் பிறரையும் ஏற்று அவர்தம் குற்றம் குறைகளை மறந்து பிறர்தமக்கு செய்யும் இடர்களையும் பொருட்படுத்தாது பிறரையும் அகத்தியரின் பக்தர்களாக ஆக்கிடவே தன்னலம் பாராது தொண்டாற்றுவான் அகத்தியர் அருள் பெற்றோர்.

அகத்தீசனை வணங்க வணங்க அகத்தியரின் பெருமைகளை அவன் உள்ளுணர்வால் உணர்ந்து பிறரையும் உணரச்செய்து ஒருபெரும் அகத்தியர் வழிவந்த பக்தர் கூட்டத்தை உருவாக்கி பெரும் புண்ணியவானாக ஆகி அகத்தியர் புகழ் உரைத்ததினால் அகத்தியரின் அன்பிற்கு பாத்திரமாகி ஞானியர் தம்மால் மெச்சும் சீடனாக ஆகிவிடுவான் அந்த அகத்திய பக்தன். அப்படி அகத்தியரின் அருள்தனை முழுமையாக பெற்ற அவனே முருகனின் அருள்பெற்றிட தகுதி உடையவனாகின்றான்.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்



No comments:

Post a Comment