முருகா என்றால்,
பாவபுண்ணியங்கள் மீது நம்பிக்கையையும் கடவுளின் மீது பக்தியையும் உண்டாக்குவதோடு ஜீவகாருண்யமே ஞானவீட்டின் திறவுகோல் என்பதை உணரச்செய்து பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்ள வாய்ப்பை அருளி ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான்.
கடவுள் நம்பிக்கை இல்லாமலும், பாவபுண்ணியங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமலும் உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால் அவ்வுயிர்கள் பட்ட வேதனையே அவர்களை தாக்கி இச்சென்மத்திலே முன்சென்ம பாவங்களெல்லாம் ஒன்று கூடியே இப்பிறவியில் தம்மை மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற தற்கொலை எண்ணமும், அதற்குண்டான வகையினிலே அவர்தமக்கு இசைவான சூழ்நிலைகளும் தோன்றி தற்கொலை செய்து கொள்வார்கள்.
முற்பிறவிகளின் செய்த உயிர்க்கொலை பாவமே இச்சென்மத்தினில் விபத்தாக உருமாறி உயிர்பலி செய்தோரை உயிர்பலி வாங்கி கொன்று அகால மரணத்தை உண்டாக்கும். அதற்கான இசைவான சூழ்நிலைகளும் அவர்தம் வினையே ஊட்டும்.
முற்பிறவி உயிர்க்கொலை பாவமே இச்சென்மத்தினிலே கொடும் நோயாக, தீராத வியாதியாக தோன்றி உயிரைப் பறிக்கும் எமனாக அவருக்கு வந்து இச்சென்மத்தில் உயிரை இடைமரணம்தனை ஏற்படுத்தி அற்ப ஆயுளில் மரணிக்கச் செய்யும்.
ஒருவன் முன் சென்மங்களிலே செய்த பாவத்தை அதன் சம்பளமான ஊழ்வினையை தன் முயற்சியால் தன் அறிவால் பிற மனிதர்களின் துணையால் கண்டிப்பாக வென்று ஊழ்வினை குற்றத்தின் பிடியினின்று தப்பிக்க இயலாது.
தப்பிக்க முயற்சி செய்திட அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக அவனது வினையே அமைந்து புண்ணியங்களை செய்திட முடியாத வண்ணமே அவனை கொடும் வறுமைக்கு உள்ளாக்கி ஒருவேளை சோற்றுக்கே வழியற்றவனாக ஆக்கி பிறரிடம் யாசித்து சாப்பிடும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிடும். மானத்தை காக்க உடைகள் ஏதும் இல்லாத கந்தல் அணியும் வறியவனாக மாற்றி, மாற்று உடைகூட இல்லாத கொடும் தரித்திரனாக மாற்றிவிடும்.
இவனுக்கு ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லை. எங்கே இவன் அன்னதானம் செய்து பிற ஜீவர்களின் ஆசியைப் பெற்று ஊழ்வினையை வென்று தமக்கு உற்ற ஊழ்வினை தோடத்திலிருந்து தப்பித்து, தமக்கு உற்ற மரண கண்டத்திலிருந்து தப்பிப்பான்? இவற்றிற்கெல்லாம் ஒரே விடிவு! ஒரே மார்க்கம் உண்டு.
சோதி வடிவினனாகி ஐந்தொழில் புரியும் திறமும் இயற்கையை தமக்குள் உள்ளாக்கி இயற்கையையும் கட்டுப்படுத்தி இப்பிரபஞ்சத்தையே ஆட்டி படைப்பவனும் பரிணாமத்திற்கு அகப்படாதவனுமாகிய ஞானிகள்தம் ஞானத்தலைவனாம் முருகனை உளமார மனம் உருகி நெஞ்சமெல்லாம் நெகிழ பயபக்தியுடன் பணிந்து சிந்தையுள் முருகன் தன் திருவடிகளை ஏற்று சித்தமெல்லாம் முருகநாமமே ஓங்கிட முருகா! முருகா! முருகா! என்றே சரவணபவா! சரவணபவா! சரவணபவா! என்றே செந்தில்நாதா! சிங்காரவேலா! கார்த்திகை மைந்தா! கருணைக்கடலே! கருணாமூர்த்தியே! கற்பகவிருட்சமே! வேற்படைநாதா! வேதவித்தகா! எங்கள் குல மாணிக்கமே! என்றே மனம் நெகிழ பூசைகள்தனை செய்திட செய்திட முருகன் அருள்கூடி எந்நிலையில் பக்தன் இருப்பினும் அவன்தன் வினை தோஷங்களையெல்லாம் பொடிப்பொடியாக்கி, என் பக்தன் இவன், இவன் பாதுகாவலன் நான் அன்றோ! என்றே யாருக்கும் அசையாத அந்த பிரம்மாண்டமான சோதி, ஏழை பக்தன் பூசைகளினால் இறங்கி அவனுக்கும் அருள் செய்ய துவங்கிடும்.
ஆதலின் மக்களே முருகன் திருவடியை காலம் தாழ்த்தாது பற்றுங்கள் நீங்கள். எத்துணை பாவங்கள் செய்தவராயினும் சரி, கவலையில்லை கடைத்தேற்றவல்ல தலைவன் திருவடியை இன்று முதலேனும் புலால் மறுத்து, உயிர்க்கொலை தவிர்த்து, தூயசைவநெறிக்கு வந்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்து முருகனின் நாமத்தை ஒரு நாளைக்கு இருவேளை குறைந்தது பத்து நிமிடமேனும் முருகன் திருவடியை மானசீகமாக மனதினுள் எண்ணி முருகா! முருகா! முருகா! என்றோ, சரவணபவ! சரவணபவ! சரவணபவ! என்றோ மனம் உருகி செபித்து வாருங்கள். முருகன் அருள் கூடி உங்கள் வினைகளையெல்லாம்
பொடியாக்கி உங்களுக்கு உற்ற ஊழ்வினை தோஷங்களிலிருந்து விடுபட்டு நலமான வளமான வாழ்வை முருகன் அருளால் பெற்று உயர்வடையுங்கள்.
-சுபம்-
முருகனைப் போற்றுவோம்
புண்ணியத்தையும் அருள்பலத்தையும் பெற்று இன்புறுவோம்.
பரமன் திருவடியை போற்றுவோம்
பாவபுண்ணியத்தை நம்புவோம்.
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
No comments:
Post a Comment