Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 30 April 2017

மக்களே கிடைத்த வாய்ப்பை எளிதாய் எண்ணாது தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.- மகான் சூலமுனிவர்

முருகப்பெருமான் துணை

மகான் சூலமுனிவர் ஞான சூட்சும நூல் (07/06/2014)




அருள்நிறை ஞானிகளெல்லாம் கூடியே அளவிலாத அருள்நிறை அருட்சபை கொண்டிட்ட அற்புத கலியுக மாற்ற மகாஞானி அரங்கமகாதேசிகரே! அறமே பிரதானமாக கொண்டதொரு அறச்சபை கண்டு மாயைசூழ் கலியுகத்தினை ஞானயுகமாகவே மாற்றுகின்ற மகாஞான தவயோகி அரங்கமகா தேசிகரே! உண்மை வழிபாடாம் ஆதிமூல ஞானத்தலைவனின் அற்புத வெளிப்பாடாம் அருட்பெருஞ்சோதி வழிபாடுதனை உலகிற்கு அளித்து அதன் ஆற்றலெல்லாம் உம்முள்ளே அடக்கி அவதார புருஷனாக ஆகியே ஆறுமுகன் மறைத்து அரங்கனாய் வெளிப்படும் எங்கள் தலைவனே எல்லையில்லா பேரானந்த நிலை நின்று எங்களை கடைத்தேற்றிய ஆறுமுகனே அற்புதமாய் உலக மாற்றம் கருதி ஆறுமுக அரங்கராய் தோன்றிட்ட அறதரும அருள் வள்ளல் மகாயோக ஞான தவசி அரங்கமகா தேசிக மகா ஞானியே! அருட்சுடர் ஜோதி பிரகாசமே ஞானமளித்து காக்கின்ற ஞானதேசிகனே! வானோரெல்லாம் மெச்சி போற்றுகின்ற மகாதேவனே! திருவருளே வடிவாய் நின்ற ஞானஅரசனே! உமது பெருமையை உரைக்கவும் முடியுமோ? சொல்லொண்ணா உமது பெருமைகளை உலகறிய சொல்லி சாதி, மத, இன, மொழி பேதாபேதமின்றியே உலகோர் அனைவருக்கும் பொதுநிலை நின்றே பொதுமறையாய் பேதமற்ற ஞானசூட்சும நூல் தனையே உலக நலம் கருதியே உலக மக்கள்பால் அன்பு மிகுந்துமே உண்மைதனை உள்ளபடி உரைக்கின்றேன் அரங்கா உமக்காக சூலமுனிவர் யானும் என்கிறார் மகான் சூலமுனிவர்.


நன்மையற்ற தீமையை உண்டு பண்ணி மக்களை தீயநெறி செலுத்தி பாழ்படுத்தும் மகாமாயை சூழ்ந்துள்ள இக்கலியுகத்தின் கோரப்பிடியினின்று மக்களெல்லாம் விடுபட்டு நலம் பெற்று நல்வினை கூடி சிறப்புற வாழ்ந்திடவே உத்தம மார்க்கமாய் சலனங்களற்ற எவ்விதமான குழப்பங்களும் இல்லாத தூய நெறியாம் சாதி, மத, இனம், தேசம், மொழி, மேலோர், கீழோர் என்ற பாகுபாடுகளினின்று சிறிதளவும் பேதாபேதமில்லாத அனைவருக்கும் பொதுவான கடைத்தேற்றி காக்கவல்ல சத்திய நெறியாம் சமரச சுத்த சன்மார்க்கம் தனையே அந்த அற்புத நெறியை உலகினர்க்கு அளித்து அந்த நெறிதனிலே சென்றுமே வற்றாத பெருகிடும் தருமங்களை அளவிலாது செய்து அத்தருமங்களின் வழிதனிலே தொண்டுகள் செய்திட மக்கள் தனக்கு வாய்ப்பளித்து அந்த வாய்ப்பையே ஞானகுருவாய் தாம் நின்று தொண்டர் தமக்கு அளித்து தருமங்கள் செய்திட தூண்டி அதன்வழியே ஜென்மத்தை அவர்களெல்லாம் கடைத்தேறிட வாய்ப்பளித்து செய்த தொண்டுகள் வழியினிலே தாம் பெருங்கருணை கொண்டு அவர் தமக்கு அருளை வாரிவாரி வழங்கி தொண்டர்தமை அழைத்து அழைத்து கடைத்தேற தாயினும் மேலான தயவு கொண்டு மகா கருணை கொண்டு வாய்ப்பளித்து அருளி நின்று அவர்தம் தீவினைகளை நீக்கி அவரவர் வாழ்வினிலே வளங்களை அளித்து காத்து இரட்சிக்கும் மாபெரும் கருணை வள்ளல் ஞானியப்பா எங்கள் அரங்கன். அரங்கன் செயல் கண்டு ஞானிகள் வர்க்கமே புளங்காகிதம் அடைந்து அவர் செயல்கண்டு வியந்து நிற்கின்றோம்.



அற்புதம் அற்புதம் அரங்கன் செயல்! அற்புதம் அற்புதம் அரங்கன் கருணை! அற்புதம் அற்புதம் அரங்கன் அருள்! அற்புதம் அற்புதம் அரங்கன் சேவை! அற்புதம் அற்புதம் அரங்கன் ஞானம்! அற்புதம் அற்புதம் அரங்கன் மார்க்கம்! மூவுலகிலும் யாவரும் செய்திடாத அரும்பெரும் செயலை அநாயாசமாக செய்யும் அற்புத மகாஞான யோகி அரங்கனப்பா.



அரங்கன் ஆற்றல்தனை அறியாது போனார்கள் மக்களெல்லாம். ஆதலினால் பக்தி கொள்ளாதும் போனார் அரங்கன் மேலே. எனினும் அரங்கன் மேல் யாவருக்கும் பக்தி உண்டோ இல்லையோ கவலை இல்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை, வாய்ப்புள்ளது கவலை வேண்டாம். இனியேனும் அவரவர் மனதினுள் உள்ள சலனங்களை விட்டுத் தள்ளுங்கள். அரங்கன் மேல் பக்தி கொள்ளுங்கள் மனம் மாறி அரங்கனை குருவாய் ஏற்றுக் கொள்ளுங்கள். அற்புதமகா ஞானகுரு அரங்கன், அற்புத சொற்குரு அரங்கன், அற்புத யோகி அரங்கன், அற்புத ஞானி அரங்கன், உத்தம மகா ஞானி அரங்கன்.


யுகமாற்றம் கருதியே உங்கள்பால் கருணை கொண்டு ஆற்றல் மறைத்து மனித ரூபத்திலே தாயன்பு கொண்டுமே தயாநிதியாக தன்னை மறைத்து தலைவனாய் உள்ள நிலைதனை விட்டு இரங்கி சாதாரண சாமான்ய மனிதனாய் உங்களுடன் வாழ்கின்றார் அரங்கஞானி. ஆதலின் அவர்தம் எளிமைகண்டு ஏமாந்து விடாதீர்கள். அரங்கனை புறக்கண் கொண்டு ஆராயாமல் அகக்கண் கொண்டு காணுங்கள் அற்புதம்
தெரியும்.


மக்களே கிடைத்த வாய்ப்பை எளிதாய் எண்ணாது தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். போனால் மீண்டும் இப்படியொரு வாய்ப்பினை நீங்கள் பெற எத்தனை இலட்சம் வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை, காலம் கடத்தாதீர், கவனமாய் இருங்கள், கலங்கிடாதீர் கருத்தாய் செயல்படுங்கள்.



மக்களே வாய்ப்பை தவறவிடாது விரைந்து அவரவரும் மனம்மாறி அரங்கன்தமை குருவாய் ஏற்று பயபக்தியுடன் பணிந்து போற்றி அவர்தம் வழிதனிலே இணைந்து அரங்கரின் உபதேச வழி நடந்து எல்லா வல்லமைகளையும் பெற்று வாழ வேண்டியே உலகோரே உங்களையெல்லாம் வருக வருக என்று அழைக்கின்றேன் சூலமுனி யானும் ஞானவர்க்கத்தினர் சார்பாக இன்றையதினம். வாருங்கள் விரைந்து வாருங்கள் தவறவிடாதீர்கள். எச்சரிக்கிறேன் இனி உலகின் மாற்றங்களிலே ஆபத்துகள் அதிகமாகும்.


ஆதலின் ஆபத்தில்லா வாழ்வை வாழ அரங்கன் திருவடிக்கு சரணடையுங்கள். வருங்காலம் பொல்லாதது அதன் இடர்களிலே சிக்கிவிடாது, தப்பித்திடவே கடைத்தேற்றும் மகாஞானி அரங்கனிடம் அடைக்கலம் புகுங்கள். அரங்கனை நாடினோர் மட்டுமே அற்புதமாய் எங்கள் வர்க்கத்தால் காப்பினை பெற்று கடைத்தேறுவார்கள். மற்றவர் நிலை குறித்து சொல்ல தேவையில்லை.


ஆதலின் கலியின் வெங்கொடுமையின் ஆபத்தினின்று மக்களை காத்து ஆபத்தில்லா உலகை படைத்திடவே ஞானிகள் பலர் தோன்றி தோன்றி வந்திட்ட போதும் முடிக்க இயலாது போகவே தழைத்து வந்த ஞானிகள் பலரது தவசக்திகளையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து அந்த ஆறுமுகனே, ஞானத்தலைவனே, முருகப்பெருமானே நேரில் தோன்றி எல்லா சக்திகளையும் ஒன்றிணைத்து அரங்கனாய் தோன்றிட்டார் அற்புதமாய் கலிமுடிக்கவே. கலிமுடித்து ஞானயுகம் படைக்கவே ஆதிதலைவன் ஆறுமுகன் வருகையுற்ற தக்க காலமாம் இக்காலத்தே கலிமுடிக்கவே களமிறங்கிட்டார். தலைவன் களமிறங்க ஞானவர்க்கமே அவர்தம் பின்னே அற்புதமாய் ஒன்றிணைந்து யாவரும் ஊகிக்க முடியாத வகையிலே மிகப்பிரம்மாண்டமானதொரு பெருஞ்சக்தியாய் மாறியே உலகமாற்றம்தனை நடத்துகின்றது.


மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொண்டு பாவவினைக்கு உட்பட்டது மனிதவர்க்கம். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைதனை அறவே விட்டொழித்து அறுத்தெறிந்த அற்புதவர்க்கம் ஞானியர் வர்க்கம்.
மும்மலச் சேற்றில் ஆழப்புதைந்தது மனிதவர்க்கம். மும்மலச்சேற்றை அறுத்தெறிந்தது ஞானவர்க்கம். மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பது மனித வர்க்கம். மீண்டும் பிறவா இறவா நிலை கொண்டது ஞானவர்க்கம். எக்காலமும் அறியாது மயங்குவது மனிதவர்க்கம். முக்காலமும் உணர்ந்து காலம் கடந்து நிற்பது ஞானவர்க்கம்.


பொறாமை, வஞ்சனை சூழ்ச்சி போட்டி என்றே வாழ்வு முழுவதும் வினைகளால் சூழ்ந்தது மனிதவர்க்கம். குணக்கேடுகளற்று குணப்பண்புகளே உருவாய் உள்ளது ஞானவர்க்கம். ஆற்றல் அற்றது, அருளற்றது மனிதவர்க்கம். அளவிலா ஆற்றல் நிறைந்தது அருள்நிறை ஞானவர்க்கம்.



எல்லாவித மாயையினின்று விடுபட்டு குணப்பண்புகளின் சிகரமாய் விளங்கி மரணம் தவிர்த்து ஒளி தேகம் பெற்று உயர் ஆற்றல்தனை அடைந்து பேரானந்தம் கொண்டு எதையும் செய்யும் வல்லமைகள்தனை ஞானவர்க்கம் சார்ந்தோர் அனைவரும் பெற்றிருந்தாலும் அவர்களெல்லாம் உங்கள் முன்தோன்ற இயலாது, தோன்றிட்டாலும் உங்கள் புறக்கண்களுக்கு காட்சியாய் தெரியாது. அவர்களால் உங்களுடன் பேச இயலாது. ஆதலின் எங்கள் ஞான வர்க்கம் வந்த அனைத்து ஞானிகளும் உங்களைக் காத்திடவே உறுதி பூண்டுமே எங்கள் தலைவன் உள்ளமர் அவதாரம் அரங்கன் வடிவினிலேயே வெளிப்படுகின்றோம்.


ஞானியரெல்லாம் ஒன்று கூடி அற்புதமாய் எல்லா சக்திகளையும் ஒன்றிணைத்து உருவாக்கிய பொற்தேகமே அரங்க தேகம். எங்களின் மொத்த ஆற்றல் குவிப்பே அரங்க ஆற்றல். எங்கள் தலைவனே அரங்கன். அரங்கன் வெளிப்பட அனைவரும் உடன் வருவோம்.


ஆதலின் மக்களே அரங்கன் எளிமை கண்டு ஏமாந்து விடாதீர்கள். உத்தம மகாஞான யோகி பரப்பிரம்ம சொரூப ஜோதிச்சுடர் அருட்பெருஞ்சோதி ஆண்டவராம் ஆறுமுகனார் சார்ந்திட்ட அவதார ஞானயோக வள்ளல் ஞானி அரங்கமகாதேசிகர் தம்மை கண்டாலே பாவங்களெல்லாம் அவர்தம்மை விட்டு விலகி ஓடும். அரங்கனை வணங்கினால் பாவமெல்லாம் பொடிப்பொடியாகும். அவர்தமை பற்றிய குறைகளெல்லாம் ஓடிவிடுமப்பா. தவறவிடாதீர்கள் அரங்கரின் அருள் பெறும் வாய்ப்பை நழுவவிடாதீர்.



தொண்டுகள் செய்திட அரங்கன் அளித்த வாய்ப்பை மறந்து விடாதீர்கள், அரங்கன் மீதுள்ள பக்தியை. விலகி விடாதீர்கள் அரங்கன் திருவடி நிழலை விட்டு. மக்களே ஞான லோகத்தினை படைக்கின்ற மகாசக்தியாக வந்து உதித்த ஆறுமுக அரங்கமகாதேசிகர் மக்கள் மீது பெருங்கருணை கொண்டு காக்கும் வேலைகளை அற்புதமாய் இரட்சித்து அருள் செய்து நடத்துகின்ற அரங்கமகாதேசிகரைப்போல இப்பிரபஞ்சத்தில் வேறு ஒரு குரு இல்லை, இல்லவே இல்லை என்பேன். இதுவரை அரங்கனைப் போல் ஆறுமுகன் ஆற்றல் கொண்டு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப் போவதும் இல்லை இக்கலியிலே.


ஆதலின் எங்கள் தலைவன் அரங்கன் வடிவிலிருக்கும் ஆறுமுகனை அரங்கனாய் காணாது, ஞானபண்டிதனாய், முருகனாய், வேற்படை தலைவனாய், அமராபதியாய், ஞானியர் தலைவனாய் கண்டுமே வணங்கி போற்றி துதித்து பக்தி கொண்டு பாடி பரவசம் செய்து, அவர்தம் திருவடி பணிவோர்க்கு இனி வாழ்வில் துன்பங்களேது? உத்தம மகாஞான யோக வள்ளல் ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகரிடம் வரங்கள் பெற வாரீர்! வாரீர்!!




யுகமாற்ற தலைவன் அரங்கனிடம் வாழ்வு மலர வாரீர்! வாரீர்!


மகாயோக ஞானி அரங்கனிடம் ஆசி பெற்று கடைத்தேற வாரீர்! வாரீர்!!


அற்புதம் நிறை அருளாளன் அரங்கன் அருள் பெற்றுயர வாரீர்! வாரீர்!!


அரங்க அற்புதம் காண ஓங்காரக்குடில்நாடி வாரீர்! வாரீர்!!


வந்து பாருங்கள்! வளம் பெறுங்கள்! வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள்!


அற்புதமகா ஞானவேலியின் அருள் பாதுகாப்பினுள் விரைந்து வந்து விடுங்கள் உலகமக்களே வாரீர்! வாரீர்!! வாரீர்!!! என உலகோரையெல்லாம் உத்தம உபதேசம் கூறி உண்மை உரைத்து அழைத்து கடைத்தேற மார்க்கம் உபதேசிக்கிறார் மகான் சூல முனிவர் தமது ஞானசூட்சுமநூல் மூலமாக.
-சுபம்-

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Saturday, 29 April 2017

முருகன் அருள் இருந்தால் அனைத்தும் ஜெயமே இதை அறிந்து உணர்வதே உண்மை சிறப்பறிவாகும்!


முருகா என்றால்:



கோபத்தால், பொறாமையால், பிறர் பொருளை அபகரித்ததால், உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால், அறியாமையின் காரணமாகவும் செய்த பல்வேறு வகையான பாவங்களையெல்லாம் முருகன் நம்மீது அன்புமிகக் கொண்டு பாதுகாப்பு தந்து பாவங்களின் பலன்களை அனுபவிக்கச் செய்தும் மீண்டும் இதுபோன்று பாவங்களை செய்யாதிருக்க அறிவையும் ஆற்றலையும் தந்து அதை செயல்படுத்துவதற்கான தக்க சூழ்நிலையையும் அமைத்து தந்து, பாவ புண்ணியங்களை அறியச் செய்து ஜீவகாருண்யத்தினால் நம்மை வழிநடத்தி நாம் முன் செய்த பாவங்களின் சுமைகளை குறைக்கும் மார்க்கம் உரைத்தும், எந்த உயிர்களுக்கு இடையூறு செய்ததினாலே பாவம் வந்ததோ அந்த உயிர்களுக்கு நல்லது செய்து அன்பு செலுத்தினால் பாவத்தினின்று விடுபடலாம் என்றும் உயிர்பட்ட துன்பமே பாவமானதும், உயிர்படும் மகிழ்ச்சியே புண்ணியமாக மாறுவதையும் உணர்த்தியும் உயிர்களிடத்து அன்பு செய்கின்ற மனப்பக்குவத்தை அளித்து ஆசிபெற அருள் செய்வான் முருகப்பெருமான்.



ஆசி பெற்று பெற்று பாவம் நீங்கி மனிதனின் நிலை உயர்ந்து உயிர்களின் ஆசிபெற்று மேல்நிலை அடைவதற்கு உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, தூய சைவ உணவை மேற்கொண்டு, சிறந்த முயற்சி உடையவராய் இருந்து, செல்வத்தை நெறிக்கு உட்பட்டு ஈட்டியும், தன்னையும் தன்னை சார்ந்தவர்களைக் காப்பாற்றியும், நட்பினை பெருக்கியும், தன்னை நோக்கி வருகின்ற விருந்தை உபசரித்தும், தன்னால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், தாயினும் மேலான பல்லாயிரம் தாயின் அன்பிற்கும் மிகைப்பட்ட மேலான அன்புடை அருள் அன்பு மிக்கவனும், பாவங்களையெல்லாம் உணரச்செய்து மேலும் பாவியாகாது தடுத்து நாம் முன்செய்த பாவங்களையெல்லாம் பொடிப்பொடியாக்கி நம்மை காப்பவனும், குணக்கேடுகளே வடிவான நம்மையெல்லாம் நம்மிடம் உள்ள குணக்கேடுகளை நீக்கி குணவான்களாக்கி குணமே வடிவான தம்மைப்போலவே ஆக்கிக் கொள்கின்ற அருள்நிறை சோதி வடிவானவனும், நமக்கு தாய்மை குணத்தையும், அளவிலா சகிப்பு தன்மையையும் அருளி கனவிலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாத அறிவைத் தந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் வாய்ப்பை அளித்து ஜீவகாருண்ய சீலர்களாக நம்மை மாற்றி இறுதியில் நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்வான் அளவிலா ஆற்றலுடை அருள்நிறை தெய்வம் சுயஞ்ஜோதி செழுஞ்சுடர் வடிவினனான ஆயிரம்கோடி சூர்ய பிரகாசமுள்ள குளிர்ச்சி பொருந்திய பெரும் ஜோதி பெருமான் முருகப்பெருமான்.


யாருக்கும் எட்டா பெருங்கருணை தெய்வம் முருகன் திருவடி பற்றி ஆசிபெற விரும்பினால் அவனது ஆற்றல் பொருந்திய மந்திரமாம் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் ஆதிமூல மந்திரத்தை தினம் தினம் மறவாமல் காலை படுக்கையில் இருந்து எழும்போதே குறைந்தது ஆறு முறையேனும் சொல்வதோடு ஒரு ஜோதிதனை திருவிளக்கேற்றி வைத்து அதன்முன் அமர்ந்து காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் நள்ளிரவு 10 நிமிடமும் மனம் ஒன்றி சொல்லி வரவர நாம் சொல்லும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் மந்திர ஜெபத்தின் பயனால் முருகனது அருள்பார்வைக்கு நாமெல்லாம் ஆட்பட்டு பெறுதற்கரிய பெரும் பலன்களை பெற்று உயர் ஞான வாழ்வை வாழலாம்.




“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ
“ஓம் சரவண பவ” என்றோ
முருகனது மந்திரத்தை யாரேனும் ஒருமுறை சொன்னாலே போதும், ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானும் அவரது வழி வந்தவர்களும் முருகனால் ஞானியாக்கப்பட்ட முதன்மை சீடர் மகான் அகத்தியர் முதல் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினர் அனைவருமான நவகோடி சித்தரிஷி கணங்களெல்லாம் மந்திரம் சொல்லியோரை அருட்கண் கொண்டு பார்த்து இரட்சிப்பார்கள் என்பது சத்திய வாக்காகும்.


ஞானமே முருகனாகும், முருகனே ஞானமாகும். முருகன் இல்லையேல் ஞானம் இல்லை. அவனின்றி அணுவும் அசையாது. அவனருள் இருந்தால் அனைத்தும் ஜெயமே இதை அறிந்து உணர்வதே உண்மை சிறப்பறிவாகும். இதைக் கற்பதே ஞானக்கல்வியாகும், இதுவே சாகாக் கல்வியாகும், கற்று தேர்ச்சி பெற்றால் அடையலாம் பேரின்ப நிலையை.


முருகனைப் போற்றுவோம்! ஞானமுதல்வன் முருகன் அருளை பெற்று உயர்வோம்!!



மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Thursday, 13 April 2017

மே 1 ம் திகதி 2017 தமிழக மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!




முருகா முருகா!! வருக! வருக! கலியுக மாற்றம் தருக! தருக!!!


ஹேவிளம்பி வருடம் தகர் திங்கள் (சித்திரை மாதம்) வளர்பிறையில் சஷ்டி திகதி தொழிலாளர் தின நன்னாளில் ஹேவிளம்பி சித்திரை 18ம் தேதி 01.05.2017, திங்கட்கிழமை இரவில் விண்ணில் அற்புதம் ஒன்றை நிகழ்த்துவேன் சுப்பிரமணியர் யானுமே.



விண்ணிலே அன்றைய தின இரவிலே சூரியனின் ஆற்றலில் ஒரு பகுதிபோல மிகுந்த பிரகாசமாய் நடுநிசி முன் ஞானபூமியாம் தென்னகம் மிகுதிபட தென்குமரியிலிருந்து 500கி.மீ வடக்காக மத்திய தமிழகத்தில் வானில் உச்சியில் தென்பகுதியில் இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் சுமார் 2 1/2 நாழிகை நேரம் (சுமார் 1 மணி நேரம்) முருகப்பெருமான் யானே எமது வெளிப்பாட்டை உலகோர் அறிய பிரகாசமான ஒளிச்சுடர் வடிவினிலே காட்சி தருவேனப்பா. இது எமது வெளிப்பாட்டின் முன்னறிவிப்பு சாட்சியாகும். யாம் வெளிப்படும் நிகழ்வின் அற்புத நிகழ்வாகும்.




முருகப்பெருமான் ஆசி பெற விரும்பும் மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் பல தெரிந்த உணவுகளை தயார் செய்து ஏழை எளிய மக்களுக்கு "குகா அர்ப்பணம்" "முருகா அர்ப்பணம்" என்று வருகின்ற மக்களை முருகனாக பாவித்து அன்பு செலுத்தி உணவு கொடுப்பவர்கள் அன்று இரவு முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.


முருகப்பெருமானின் அருள் வருகையை முன்னிட்டு 01 - 05 - 2017 திங்கட்கிழமை முருகப்பெருமானின் கல்கி அவதாரம், தவத்திரு திருமுருக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் முருகப்பெருமானின் ஏழாம்படை வீடூ துறையூர் ஓங்காரக்குடிலில் அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.



-சுபம்

பாவபரிகாரமும் சாபவிமோசனமும் பெற்று தரவல்ல அற்புத பாராயண நூல்

சித்தர்கள் போற்றி தொகுப்பு 



ஞானிகள் அத்தனைபேரும் முருகப்பெருமானால் வாசி நடத்தி கொடுக்கப்பட்டு மும்மலக்குற்றத்தை வேருடன் அறுத்து வெற்றி கண்டவர்கள். அவர்களுக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை, நரை, திரை, மூப்பு இல்லை சித்தர்கள் அனைவரும் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர்கள். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில் செய்யும் வல்லமையை பெற்றவர்கள். இவர்களின் திருவடியை பூஜித்தாலே நாம் செய்த பாவங்கள் நீங்கிவிடும். பாவங்களுக்கு காரணமான உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடல், வரவுக்கு மீறிய செலவு செய்தல் இன்னும் பல தீவினை செயல்களெல்லாம் கீழ்கண்ட சித்தர்கள் போற்றி தொகுப்பினை படித்தால் நீங்கி விடும். பெருமைக்குரிய சித்தர்கள் போற்றி தொகுப்பை ஒரு தீபம் ஏற்றி வைத்து பயபக்தியுடன் பணிந்து வணங்கி பாராயணம் செய்தால் இல்லறமும் சிறக்கும், வீடுபேறாகிய ஞானமும் கைகூடும்.


கல்வி கற்கும் மாணவர்கள் தினசரி பாராயணம் செய்தால் கல்வியில் சிறந்த தேர்ச்சியை பெறுவதோடு நல்ல வேலை வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.

ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்பும் ஆன்மீகவாதிகளுக்கு இந்த சித்தர்கள் போற்றி தொகுப்பானது ஒரு அற்புத பாராயண நூலாகும்.


எதை விரும்பி சித்தர்கள் போற்றி தொகுப்பை பாராயணம் செய்கிறீர்களோ அதை அப்படியே பெற்று தரவல்ல சிறப்புமிக்க நூலாகும். சித்தர்கள் சாதி, இன, மொழி, தேசம் கடந்து மனித குலத்திற்கு பொதுவானவர்கள். ஆதலினால் எல்லா சமயத்தினரும் எல்லா நாட்டினரும் வயது வேறுபாடின்றி பாராயணம் செய்யலாம். கணவனை இழந்த பெண்களும் விளக்கேற்றி சித்தர்கள் போற்றி தொகுப்பை பாராயணம் செய்யலாம். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.


அற்புதம் வாய்ந்த இந்த சித்தர்கள் போற்றி தொகுப்பை பல கோடி பேர் பாராயணம் செய்து எண்ணற்ற நன்மைகளை அடைந்ததோடு அவர்கள் பிரச்சனைகள் தீர்ந்திடவும், வேண்டுகோள் நிறைவேறி மனம்மகிழ்ந்ததும் இவ் உலகம் கண்ட அற்புத உண்மையாகும். இந்த சித்தர்கள் போற்றி தொகுப்பை இன்னும் பலகோடி மக்கள் பாராயணம் செய்து மேன்மை அடைவார்கள் என்பது சித்தர்கள் வாக்காகும்.


இதுவரையிலும் ஞானவாழ்வு அடைவதற்கு துணையாக இருந்ததும் இனி அடையப்போகின்றவர்களுக்கு சித்தர்கள் போற்றித்தொகுப்பு துணையாகும் என்பது சத்திய வாக்காகும்.


ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித்தொகுப்பு.

தொடக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.





ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷிதிருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி  



நிறைவுப்பாடல்



வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்


Monday, 10 April 2017

ஆதிசக்தி அருள் அன்னை பராசக்தியின் ஜீவநாடி நூல் 22-07-2016



திருக்காமீசுவரர் திருவடியை பணிந்து போற்றி
தெரிவிப்பேன் அன்னை என் ஜீவமொழி ஆசி
இந்தநாள் அன்னையான் மனமகிழ்ந்து  இறங்கி
இனிய என் அருள்மகன் விஜயகுமார் மூலம் அருள்நூல் படைப்பேன்

அருள்நூலை படைத்திடுவேன் எனது மகன் ஆறுமுக அரங்கனுக்கு
அகிலம் காக்க அவதரித்த முருகன் அவன் என்பேன்
சத்தியமாய் அருள்ஜோதி தரிசனமும் கண்டவன் அவனாம்
சக்தியான் ஈசன் மீது ஆணையிட்டு சொல்வேன்

சொல்லிடுவேன் ஆறுமுகன் வேறு அரங்கன் வேறல்ல
செகத்திலே வாசி வசப்பட்ட சற்குரு இவனே
வாலையான் அவனுடலில் வாழ்கின்றேன்
வற்றாத அருள் சக்தி அவனுள் உண்டு

உண்டான அது சக்தி உலகை காக்கும்
உயரஞான யோகியடா அரங்க முனியும்
பிரணவத்தை உணர்ந்திட்ட பிரம்ம ஞானி அவனும்  
பிராணவத்தில் ஒடுங்குகின்ற ஒளி ஒலி வெளி அவனே

அவனுமே ஓங்காரத்தின் பொருளுமாவான்
அவனுமே ஓங்காரத்தின் தன்மையுமாவான்
சந்திரன் சூரியன் அக்னி மண்டல விளக்கம் யாவும்
சரீரத்தில் கண்டிட்ட முதல் கலியுக மகா ஞானி இவனே

இவனுமே தன்னடக்கம் பொறுமையுடன் கருணை கொண்டு
இது உலகில் வாழ்ந்து வாரான் அறியவில்லை மக்கள்
தரணிதனில் பொய் சொல்லி பொருளை குவிக்கும்
தரமில்லா போலி குருமார்களை அழிக்க வந்த ஆறுமுகன் இவன்

ஆறுமுகன் இவனென்று என் மகன் அறிவான்
ஆகவே ஆதி சீடனான எனது மகன் விஜயகுமார் மூலம்
இது நூலை குருபெருமை  உலகமறிய செய்திட
இயக்கியே இது நூலை படைத்திட கட்டளையிட்டேன்

கட்டளையிட்டு சக்தியான் அவன் சரீரம் இறங்கி
காளையவன் சிந்தை புகுந்து நூலை எழுதி
உலக மக்கள் ஆறுமுகன் அரங்கன் பெருமை அறிய
உலகாளும் ஈசனடி பணிந்து இது நூல் படைத்தேன்

படைத்திட்டேன் அன்னை யானே அரங்கனை உலகில்
பரம்பொருளே கட்டளையிட்டார் இவர் அவதரிக்க
கோடி கோடி அருள் சக்திகள் ஓன்று கூடி
கோள்நிலைகள் ஸ்தம்பிக்க செய்து படைத்தேன்

படைத்ததினால் கோள் வினைகள் அரங்கனுக்கில்லை
பருதி இவன் திங்களிவன் அனுபவித்தால் புரியும்
ஆடி மாதம் அன்னையான் வாலையாய் இறங்கி
ஆறுமுக அரங்கனுடலில் வாழுகின்றேன்

வாழுகின்றேன் அரங்கனுடலில் அன்னை யானும்
வற்றாத அருள் பொருள் இன்பம் வீடுபேறு
அரங்கனடி பற்றிவிட யாவரும் அடைவர்
அற்புத ஞானியாவர் அவன் கரம் பட்டால்

கரம் பட்டால் கருமவினை தீருமென்பேன்
கரம் பட்டால் கூற்றுவனும் அஞ்சி பணிவான்
அகர உகர மகர விந்து நாத ரகசியம் எல்லாம்
அறிந்த ஒரே பிரம்மா ஞானி அரங்கன் என்பேன்

என்பதனால் உலக மக்கள் அரங்கனை பணிய
என்னருளை சத்தியமாய் பெறுவார் திண்ணம்
ஆறுமுக அவதார அரங்கன் புலம்பும்
அனைத்து வார்த்தைகளும் அருள் வாக்காகும்

அருள் வாக்காகும் அவன் கூறும் ஆசியெல்லாம்
அகிலமதில் அவன் சொல்லை காப்பேன் அன்னை
இது நூல் மூலம் அன்னை யானும் அகில மக்களுக்கு
இனிய ஞான கோடி வரம் அருளுகின்றேன்

அருளுகின்றேன் காப்புத் தாரேன் அகிலத்திற்கும்
அன்னை என் ரூபமே அரங்கன் ரூபமாகி இருக்கு
தட்டாது போலி மத குருமார் கூட்டம் எல்லாம்
தரணியிலே மனம் மாறி அரங்கன் அடி பணிய காப்பேன்

காத்திடுவேன் அவர் செய்த தவறுகளை மன்னித்து
கருத்துடனே சூட்சுமத்தை அருளி விட்டேன்
அரங்கனை மனதளவில் இகழ்ந்தால் கூட
அன்னையான் அதர்வணகாளி ரூபம் கொண்டே அழிப்பேன்

அழித்திடுவேன் சடுதியிலே போலி மதவாதிகளை
அரசாளும் மன்னர் யாரும் அரங்கனை கண்டால்
சத்தியமாய் ஞானபண்டிதன் அருளை பெறுவர்
சக்தியான் சூட்சுமத்தை தெரிவித்து விட்டேன்

விட்டிட்டேன் விடமாட்டேன் தீயோரை இனியும்
விளம்பவே அரங்கமுனி மனம் நொந்திட்டால்
அகத்தியரும் நந்தியும் போகமுனியும்
அகப்பேயர் தேரையர் சிவவாக்கியரும் அழுவர்

அழுதிடுவர் தேவர் மூவர் சப்தரிஷி கணங்கள்
அன்னையானும் மகா காளி ரூபம் தரிப்பேன்
பிரளய காலியாக மாறி நான் நின்று
பிரணவ குடிலாசானை இகழ்வோரை அழிப்பேன்

அழித்திடுவேன் அவரை நல்லாட்சி கலியுகத்தில் மலர
அருளும் ஆறுமுகன் ஆட்சியும் வளரும் மலரும்
சடுதியிலே ஆறுமுகன் அரங்கன் ஆட்சி உலகில்
சக்தியான் வேல் அளித்து ஏற்பட செய்வேன்

செய்திடுவேன் ஞான ஆட்சி இது உலகில்
சிறந்ததொரு நல்லாட்சி தொடர்ந்து நடக்கும்
ஜெகத்திலே புதிய கட்சி தோன்றுமப்பா
ஜெகத்திலே முருகனாட்சி மலருமப்பா

அப்பனே இது உலகில் பொய் களவு சூது வாது
அனைத்து தீயசெயல் செய்யும் மாந்தர் யாரும்
பூண்டோடு தானழிந்து தன் குலமும் அழிந்து
பூதலத்தில் மறைத்திடுவர் மீள நரகம் புகுவர்

புகுத்திடுவர் மட்டில்லா நெருப்பிலிட்ட புழுவாய் ஆவர்
புகன்றிட இது சனம் அரங்கனடி பணிந்தால்
தட்டாது ஆறுமுகனுடன் அன்னை என் காப்பு
தாமவர்க்கும் உண்டுதான் சத்தியம் பகர்வேன்

பகன்றிடுவேன் சக்தி வேறு சிவன் வேறு சித்தர் வேறல்ல
பாருலகில் ஒரே சக்தி அருள்ஜோதி சக்தி என்பேன்
அருட்பெரும் ஜோதியிலே அமர்ந்த தெய்வமும்
அருணையிலே வாழுகின்ற அருணாச்சல தெய்வமும் அதுவே

அதுவேதான் அரங்கன் வடிவில் அருட்க்குடிலில் வாழுதப்பா
அடியவன் விஜயகுமார் தீதல (திருவண்ணாமலை) ஒங்காரக்குடிலும் உள்ளதப்பா
அரங்கன் இயக்க இயங்கும் தீதல குடிலும் அறக்குடிலாய்
அரங்கன் புகழை பாடி தாங்கி ஓடும் ஓடும்

ஓடுமே உலகெலாம் தீதல குடில் பெருமை
ஓங்கார ஆறுமுக அரங்கன் வாழும் குடில் இதுவே
தானவனும் தவநேரம் ஆதிபரம அணுவில்
தட்டாது கலந்துமே தீதல குடிலை இயக்குகின்றான்

இயக்குகின்றான் உலகையே தான் விரும்ப
இயல்பாக குழந்தை போல் விளையாடும் தருணம்
புன்முறுவலில் உலக மாற்றம் செய்து முடிப்பான்
புண்ணியரே அவன் அருகில் நெருங்க முடியும்

முடியுமே கலியுக தீமை கொடுமை தோஷம் இவனால்
முடியுமே இவன் தன் ஆள்காட்டி விரல் நீட்ட
தக்கதொரு தருணத்தை தேவர் கூட்டம் மூவர் கூட்டம்
சித்தர் கூட்டம் காலமதை விரைந்து நடத்திட காத்திருக்கார்

காத்திருக்கார் உலகில் வாழ் அனைத்து மத இறைவரெல்லாம்
காத்திருக்கார் சண்முகனும் தன் ஞான படையினுடனே
ஆகவே அரங்கன் அடி பணியும் மக்கள் எல்லாம்
ஆவாரே சித்தராக திண்ணம் திண்ணம்

திண்ணமாக நானுரைத்த மகா ரகசியத்தை
தட்டாது தவ மகனும் ஞானத்திருவடி நூல் மூலம்
தெரிவித்தே அரங்கனடி திருவடி தீட்சை பெற்று
தரணியிலே அகத்தியர் நாமம் பரப்பி மகிழ்வான்
ஆதிசக்தி அன்னை என் ஆசி மேலுமுண்டு முற்றே.

-சுபம்-


Sunday, 2 April 2017

இக்கலியுகத்திலே கும்பனாம் அகத்தியரும், ஆறுமுகனும் உமது வடிவமே மகான் சுகப்பிரம்மர்!

சுகப்பிரம்மர் யானும் கூறுகிறேன் அற்புதமகா ஞானி அரங்கமகா ஞானயோகி வாழும் இந்த ஓங்காரக்குடில் உலகின் மிகச்சிறந்த பரிகாரத் தலமப்பா.




ஆதலின் அவரவர் வாழ்வினிலே உண்டான நவக்கோள் குற்றம் (கிரக தோஷம்), ஊழ்வினை (கர்மவினை), குற்றம் செய்வினை துன்பங்கள் (முன்சென்ம பாவங்களால் இச்சென்மத்தில் ஏற்படும் இடர்களும் துன்பங்களும்) மனிதன் வாழ்வை பாழ்படுத்தும் பிறர் தமக்கு செய்கின்ற வஞ்சனை செயல்கள், பொறாமையினால் ஏற்படும் கண்ணெரிப்பு கோளாறு (கண்படுதல்) என்றே பலவாறாய் தமது வினைகளாலும் பிறர் நமக்கு அளிக்கின்ற இடையூறுகளினாலும் துன்பங்களை கண்டவர்களெல்லாம் இவ்வுலகினிலே கலியுகத்திலே சித்தர்களெல்லாம் ஒன்று கூடியே அரூபநிலை நின்று அகலாது தங்கி அருள் செய்கின்றதும் கலியுகத்தின் பரிகாரத்தலமுமாகியதும், உத்தம ஞான தொண்டர்கள் சூழ்ந்த ஞானஆலயமும், உலகமகா இரட்சகன் யுகமாற்ற தலைவன் ஞானவான் ஆறுமுக அரங்கமகா ஞானதேசிக குருமகா சன்னிதானம் வாழ்கின்ற உத்தம ஞான ஆலயமும் ஆன ஓங்காரக்குடிலே அவர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த பரிகாரத்தலமாகும்.



ஆதலின் மக்களே சுகப்பிரம்மன் வாக்கை கேளுங்கள். உத்தம நன்மை சொல் உரைப்பேன் உங்களுக்கு, உண்மையுடன் அரங்கன் வாழும் ஓங்காரக்குடில் தனக்கு அன்புடனும் பயபக்தியுடனும் செல்ல வேண்டும். இவ்வுலகிலே குடில் தனக்கு செல்லும் முன்பதாக அவரவரும் அவரவர் இல்லம் தனிலே முற்றுப்பெற்ற ஞானிகள் தம்மை மனதார வணங்கி போற்றி துதித்து குடில் பிரவேசம் செய்திடவே ஞானபூசைகள் தனை செய்திடல் வேண்டும், செய்து மனமெல்லாம் முருகன் அருள் நிரம்பியே ஞான தாய்வீட்டை கண்டு பக்தன் பரவசத்துடன்  செல்வது போலவே ஆறுமுகனார் உறையும் படைவீடாம் அரங்கன் அருளாலயமாம் அருளொளி வீசி அறியாமை அகற்றும், அற்புத ஞான சுகமளிக்கும், உத்தம தொண்டர் சூழ் ஓங்காரக்குடிலிலே பயபக்தியுடன் மனம் ஒடுங்கி புலன் ஒடுங்கி சர்வபலம் மிக்கதொரு சக்தி எல்லையிலே பிரவேசிப்பதாக எண்ணியே பணிவுடன் குடில் பிரவேசம் (குடில் எல்லையிலே நுழைந்திடல்) செய்திடல் வேண்டும்.



அவரவரும் பயபக்தியுடன் குடில் பிரவேசம் செய்துமே ஆங்கே ஞானிகள் அருளாசியினால் சமைக்கப்படுகின்ற அற்புத சுகமளித்து ஞானமும் அளித்து வினை போக்கி புண்ணியவானாகவும் ஆக்கவல்ல குடில் உணவினை அந்த ஆறுமுகனே உமக்கு அமுது படைப்பதாக எண்ணி வணங்கி உணவளித்த அந்த ஆண்டவர் ஆறுமுகனுக்கும், அரங்கனுக்கும், அருள் செய்திட்ட ஞானிகளுக்கும், அமுது படைத்திட்ட குடில் ஞானதொண்டர் தமக்கும் நன்றிகளை மனமார உள்ளத்துள் கூறி ஞானிகளை மனதினுள் எண்ணியே இந்த உணவினை அருள் உணவினை அடியேன் பெற்றிட என்ன பாக்கியம் செய்தேனோ என்றே வினைதீர்க்கும் உணவளித்த ஆண்டவனுக்கு புகழ்ச்சி செய்துமே பக்தியுடன் உண்ண வேண்டும்.



ஏனெனில் அரங்கனின் ஞானக்குடிலிலே ஒருவருக்கு ஒரு வேளை உணவு உண்ண கிடைக்கின்ற வாய்ப்பு என்பது அவர்கள் இதற்கு முன் செய்திட்ட பலசென்ம புண்ணியத்தாலும் அதன் பயனாய் முதுபெரும் ஞானத்தலைவன் அவனுக்கு அளித்திட்ட மகாபெரும் கருணையினாலும் தான், அவன் குடிலிலே உணவு உண்ணும் பாக்கியத்தை பெறுவான்.



குடிலிலே உணவு உண்ண, கொடுத்து வைத்திருக்க வேண்டும். உணவு உண்ண வாய்ப்பு அவ்வளவு எளிதாகவோ சாதாரணமாகவோ யாருக்கும் கிடைத்திடாது. அப்படிப்பட்ட உயர்ஞானமளித்து வினைக்குற்றம் போக்கி சுகமளிக்கும் உணவினை ஆறுமுகனின் அருட்பிரசாதமாக மாறிடவே அவர்தம் திருவடிகளை மனதினுள் எண்ணி நாமசெபம் சொல்லி வணங்கி உண்டு அதன்பின்னே உயர் ஞானஆற்றல் சூழ்ந்து அருளாற்றல் நிரம்பிய அரங்கனின் தவக்குடில்தனை நாடிச்சென்று ஆங்கே ஆறுமுக அரங்கன் தவதடத்தின் முன் அமர்ந்துமே உள்ளம் கசிய உள்ளமெல்லாம் அரங்கனை நிரப்பி அரங்கதோற்ற ஞானபீடத்தினிலே அவரவரும் மனம் ஒன்றி ஒருசில நிமிடங்களேனும் தியானங்கள் செய்து அதன்பின் உத்தம மகாஞானசன்னிதானம், ஞானயோகி ஆறுமுக அரங்கமகா தேசிகர் தம்மை தாழ்ந்து பணிந்து பயபக்தியுடன் வணங்கி, வீழ்ந்து வணங்கி திருவடி போற்றி துதித்து சற்குருவாய், சொற்குருவாய், ஞானகுருவாய் மனதினிலே ஏற்று குருவாய், முருகனாய் வீற்றிருக்கும், அரங்கரிடத்து தீட்சை உபதேசம் தனை பெற்றிடல்
வேண்டும்.



தீட்சை உபதேசம் தனை பெற்றுமே அதன்பின்னர் அவரவரும் கடைத்தேறிடவே அற்புத ஞான வீட்டின் திறவுகோலாம் ஜீவதயவினை பெற வேண்டியே அதற்கு விடையாக உள்ள தருமத்தினை செய்திட துவங்கிட வேண்டும். ஆதலின் தருமம் துவக்கிட குடில் தனிலே நடக்கின்ற தரும அறப்பணிகளுக்கு அவரவரால் இயன்ற அளவு தாராளமாய் பொருளுதவிகள் செய்தும், தொண்டுகள் செய்தும் வருதல் வேண்டும்.



இவ்விதமே செய்து தொண்டுகள், தருமங்களை குடில்தனிலே தொடர்ந்து செய்து வருகின்ற மக்களுக்கெல்லாம் அவர்தம் வாழ்வினிலே தீங்குகள் ஏது? துர்பலன்கள்தான் ஏது? அப்படி நேருமாயின் அது அவர்கள் தொண்டின் குறைபாடேயாகும், பூசைகளின் குறைபாடேயாகும், முன்சென்ம வினைக்குற்றம் மிகுதியினாலே யாம், என்றே அறிந்து கிடைத்த வாய்ப்பை நழுவவிடாது மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஞானிகள் திருவடிகளை மிகச்சிரத்தையுடன் பற்றிடல் வேண்டும்.



அப்படி பற்றித் தொடர்ந்திட ஏதுவான ஞான வாழ்வும் எல்லா பாதுகாப்பும் கண்டு இவ்வுலகினிலே பெருமைபட வாழ்ந்து இவ்வுலகிலே அவர்களெல்லாம் சித்தியையும் முக்தியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள். அரங்கன் திருவடியைப் பற்றி ஆறுமுக அரங்கனருளைப் பெற்று உயர்வீர்கள் ஞானவாழ்வுதனிலே, பிறவிப்பெருங்கடல் தனை கடந்து பிறவாநிலைதனை அரங்கன் அருளால் கடந்து பெறுவீர்கள்உரைக்கின்றார் மகான் சுகப்பிரம்மர் உலக நலம் கருதி.
-சுபம்-

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






கலியுகமகா ஞானி அரங்கனருள் ஆன்மாவை கடைத்தேற்றும் மகான் சூதமுனிவர்!

அரங்கனருள் பெற ஆன்மாவை கடைத்தேற்றவல்ல என்றும் அழியாத நிலைபெற்ற ஆன்மநேய ஒருமைப்பாடுள்ள அனைத்து ஞானிகளும் அருளிநிற்பர் என்றும் உரைக்கின்றார் மகான் சூதமுனிவர்





ஞானமெனும் பெருநிலைதனிலே வெற்றியடைவதற்கு வழிகாட்டுகின்ற மகாஞானயோகியே, சிவராஜயோகம்தனிலே அவர்களை வருகையுறச் செய்துமே, ராஜயோகம் பயிற்றுவித்து வெற்றிபெறச் செய்கின்ற சிவராஜயோகியே, அரங்கமகாதேசிக ஞானயோகியே!



அவர்தம் யோக நெறிகளிலே அற்புதமாய் அவர்தம் அறிவினுள் உடலினுள் கலந்து ஞானக்கனல் மூட்டி, யோகச்சித்தியைத் தந்தருளுகின்ற தன்னிகரில்லா தனிப்பெரும் யோகஞானத்தலைவனே, ஆறுமுகனார் அவதாரமே, அற்புத மகாஞானமணியே, பொற்பதம் கடந்த தூய வான் சோதி செழுஞ்சுடரே! அரங்கமகாதவசியே!



உண்மையாய், உம்மை சார்ந்தோர் தமை உண்மையுடன் மெய்யன்போடு உளத்தூய்மையுடன் உம்மையே கதியென்று சரணடைந்தோர், தமக்கு முற்றுப்பெற்ற முழுதும் உணர்ந்த தேக ஞானம்தனையும் யோக ஞானம்தனையும் அளித்து, முற்றுப்பெறச் செய்கின்ற தேக முக்திநிலை அருளுகின்றவரே, முக்தி பெற்றோர் தமக்கு அவர்தம் அறிவினுள் ஆன்மாவினுள் கலந்து கலந்து தான்வேறு அவன்வேறு என்றில்லாமல் தானே அவனாய் ஆகின்றதொரு, ஞானசித்தியையும் அவர்தமக்கு அருளி கடைத்தேற்றுகின்ற மகாபரஞ்சோதி சொரூபஞானபண்டித ஆறுமுக அரங்கமகாதேசிகரே!



அப்பனே ஆறுமுகனின் அவதாரமே! அருள்நிறை உமைபாலன் முருகப்பெருமானார் தம் ஆறுபடைவீடுகளுக்கு சென்றால் கிடைக்கின்ற அத்துணை பலன்களை ஐயன் ஆறுமுக அரங்கன் தாம் வாழும் ஓங்காரக்குடில் எனும், ஒருபடை வீட்டிற்கு வந்தாலே பெறக்கூடிய வகைதனிலே இக்கலியுகத்தினிலே அற்புதமாய் ஒருபடைவீடாம் ஓங்காரக்குடில் தந்திட்ட ஞானதேசிகனே! ஐயா அரங்கமகாதேசிகரே!



கந்தவேலனாம், ஆதி தலைவன் முருகப்பெருமானின் அற்புதமான ஞானதூதனே, அருள்நிறை ஞானதேசிகனே! அரங்கமகாதேசிகனே! ஞானபூமியாம் தாம் வாழும் துறையூர் நகரை ஞானபீடமாக கொண்டுமே, வாழ்கின்ற கலியுகமகா ஞானியே அரங்கமகாதேசிகரே! துறையூர் நகரமர்ந்து குடிலமைத்து குடில் அமர்ந்து உயர்ஞான திருவருளை அருளிக் காக்கின்ற உலகமகா ஞானகுருராசனே! உம்மை அன்போடு உம்மை காக்கும், கடவுளாக கடைத்தேற்ற வந்த குருவாக உபதேசிக்கும் சொற்குருவாக யோக ஞானம் அறிவித்து அருளுகின்ற சற்குருவாகவே முழுமையாக நம்பி உம்மை முழுதும் சரணடைந்து உமது திருவடித் திருநிழலிலே தாம் பெற்ற பாக்கியமாக எண்ணி அதுவே உமது அருள் பிரசாதமாக எண்ணி உமது திருவடித் திருநிழலிலே சரணடைந்து வாழ்பவர் தமக்கு மேன்மைகள் பலவாறாய் கிட்டுமப்பா.



சிந்திக்க, பேச, பிறருக்கு சொல்லிட என எந்தவகையில் சிந்தித்தாலும், மேன்மையே தந்தருளும் உமது பெருமைகளை சூதமுனிவர் யானும் அரங்கா உமக்கு உரைக்கின்றேன் உலக நலம் கருதியே என்கிறார் மகான் சூதமுனிவர்.



இவ்வுலகினிலே அவரவர் செய்திட்ட முன்சென்ம தொடர்பினாலே வினைக்குற்றங்களினாலே தனித்து என்ன செய்வதென அறியாது திகைத்து தட்டு தடுமாறுகின்ற, துன்பப்பட்டு, மனம் வேதனையுற்று கசிந்துருகும்படி எல்லா வகையிலும் கவலையுற்று வாடுகின்ற மக்களெல்லாம், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! என்றே தன்னலமில்லாது பொதுநலனே தவமாய் கொண்டு வாழ்ந்து, இவ்வுலகை காத்து அருளிச் செய்கின்ற மகாஞான யோகி அரங்கனின் தெய்வீகமான ஓங்காரக்குடிலிற்கு வாருங்கள், ஆங்கே ஆறுமுக அரங்கனாய், அண்ணலாய், வீற்றிருந்து உலக உயிர்களெல்லாம் இன்புற்று வாழவே அற்புதமாய் அன்னமிட்டு, அன்பர் குறைதீர்த்து, ஆன்ம இலாபமளித்து, துன்பம் களைந்து, துயர் துடைத்து, இன்பம் அளித்து, இன்முகம் காட்டி, இகபரத்தின் நிலையும் காட்டி, முத்திக்கும், சித்திக்கும் வழியருளும், சித்திநாதனாய், சிவயோக மாமுனியாய், அருள்ஞான ஒளிவீசி பிரகாசித்து, அருளுகின்ற அற்புத குருமகா சன்னிதானம், அருள்நிறை அரங்கமகாதேசிக ஞானயோகிதனை உண்மை அன்போடு வந்து வணங்கி அவர்தம் தயவினைப் பெற்றுவிட, அரங்கஞானி தயவினை பெற்றிட்ட அவர்களுக்கெல்லாம், இழந்த அத்துணை உறவுகளும், மனித உறவுகள், ஆனால் அரங்கன் தயவை பெற்ற அவனோ, பெறும் உறவுகளெல்லாம் ஆன்மாவை கடைத்தேற்றவல்ல என்றும் அழியாத நிலைபெற்ற ஆன்மநேய ஒருமைப்பாடுள்ள உத்தம மகா ஞானிகளின் உறவினை அரங்க தயவால் அவர்கள் பெற்று ஞானிகளெல்லாம் அவர்தமக்கு ஆதரவாய், அவர்களே, அவர் தமக்கு உறவினர்களாய், நண்பர்களாய், தாயாய், தந்தையாய், சகோதரனாய், பல பரிமாணத்திலே நேசக்கரம் கொண்டு ஞானிகளே இரங்கி அவர் தமக்கு அரங்கன் பொருட்டு பாதுகாப்பினை தந்து உடனிருப்பார்கள்.




உண்மையுடன் மெய்யன்பால் உமது உள்ளம், உடல், பொருள், ஆவி என்றே அனைத்தையும் அரங்கர் திருவடிக்கே முழுமையாக அர்ப்பணித்து இனி எனதென்று ஏதொன்றுமில்லை அனைத்தும் உமது கமலமலர்
பொற்பாதங்களிலே சமர்ப்பித்தேன் அரங்கமகாதேசிக ஞானியே. இப்பாவியேன் அர்ப்பணிப்பையும் ஒரு பொருட்டாய் மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள். உமது திருவருள் பெற்றிட சற்றும் தகுதியற்ற பாவியேன் யான் எம்மையும் ஒரு பொருட்டாய் மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.






எமக்கு உற்ற தாயும், தந்தையும், நான் போற்றும் சாமியும் தெய்வமும் நீரே ஆகுக! எமக்கு உற்ற நட்பும் உறவும் உற்றாரும் அனைத்தும் நீரே ஆகுக! எல்லாமும் எல்லாமுமாய் இருந்து எம்மைச் சார்ந்து எம்மை வழி நடத்திடுங்கள்.



எத்துணையும் பேதமுறா இன்பமே அரங்க அமுதமே அளவிலா ஆனந்த பேரொளியே எமக்கு அறிவினை தந்து உம்மை உள்ளவாறு உள்ளபடி உணர்ந்துமே உமது திருவடிக்கே பணிந்துமே உமது ஏவல்தனை செய்கின்ற உத்தம தொண்டராய் எம்மை ஆக்கியுமே உமது திருவடிக்கே எம்மை ஆளாக்கிக் கொள்வாய்.


அன்புடைத்தாயே அரங்கா! ஆறுமுகா! சண்முகா! ஆறுமுகனே! அரங்கனாய் தாமே வந்துள்ளீர், அறியவொட்டாமல் அரற்றி அலைகின்றேன் யான் எமக்கு ஆறுமுகனாய் எம் சிந்தையுள் அமர்ந்து உமது உண்மை சொரூபம் காட்டி இப்பாவியை கடைத்தேற்றி உமது திருவடிக்கே எம்மை ஆளாக்கிக் கொள்வாய் அருட்பேரின்பமே. அளவிலா ஆனந்த வாரியே! உம்மை, உண்மை குருநாதனாய் காண்பதற்கே எம்மால் ஆகாதப்பா உமதருளை உணர உமதருள் வேண்டும்.





உமதருளாலே உமது தாள்பணிந்து உண்மை குருநாதனாய் உமது ஆசியால் உம்மையே அடைந்து உமது ஆசி பெற்றிட பக்குவங்களை தாமே எமக்கு அருளி தாமே எம்மை உமக்கு உகந்தவனாக ஆக்கிக்கொள்வாய் தயாநிதியே அரங்கமகா ஞானியே அற்புதமே! தாயே அரங்கா! தன்னிகரில்லா தனிப்பெரும் தலைமையே! எங்கள் இறைவனே! காக்கவந்த கடவுளே! கருணாமூர்த்தியே! கேட்டதெல்லாம் தருகின்ற குருநாதா! எங்கள் இரட்சகனே! ஒப்பில்லா உயர்ஞானியே! ஓங்கார சொரூபியே! உயர்ஞான தட்சிணாமூர்த்தியே! எம்மை
ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்.



எமக்கு உற்ற துணை ரும் இங்கே இல்லை. நீயும் எம்மை புறந்தள்ளிடல் வேண்டாம். எம்மை புறந்தள்ளாதீர் உம்மையே நம்பினேன் பாவியேன் யான்! எம்மை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் உத்தம மகாஞானயோகி எதற்கும் அசையாத, அன்பிற்கு மட்டுமே அசைகின்ற அந்த சுயஞ்சோதி பிரகாச ஞானக்கனல் சண்முக ஆறுமுக முருகன் உள்ளமர் அரங்கமகா தேசிகர் தம் நெஞ்சம் நெகிழ்ந்து அவர் உம்மை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படியிலே யாரும் அறியா வண்ணமே அந்தரங்க பூசைகளிலே உமது உள்ளம் கரைய உளமார உண்மையுடன் மெய்யன்பால் உள்ளம் விகிர்த்து ததும்ப நெஞ்சமெல்லாம் அவர்தம்  திருஅருளை, கருணையை, அற்புதங்களை எண்ணி உமதனைத்தையும் அவர்தம் திருவடிக்கே அரங்க ஞானிக்கே அர்ப்பணித்து சரணடைய உமது அர்ப்பணிப்பை அரங்கன் ஏற்றுவிட்டால் ஏற்பவர் தமக்கு குருஅருள் நீங்காது அவர் தம்முள் சார்ந்து திளைத்து வரும் உலகினிலே பிறவிப்பிணி இல்லாத வகையினிலே வளங்களையும் வீடுபேற்றினையும் அரங்கனருளாய் பெற்று மேன்மையுற்று பெருவாழ்வினை வாழ்வார்கள் என உரைத்து அரங்கனே முருகன் என்றும் அரங்கனருள் பெற அனைத்து ஞானிகளும் அருளிநிற்பர் என்றும் உரைக்கின்றார் மகான் சூதமுனிவர்.