Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Thursday, 9 December 2021

திருஅருட்பா- ஐந்தாம் திருமுறை

கருணை மாலை


1.சங்க பாணியைச் சதுமு கத்தனைச்

செங்கண் ஆயிரத் தேவர் நாதனை

மங்க லம்பெற வைத்த வள்ளலே

தங்க ருள்திருத் தணிகை ஐயனே.

2. ஐய னேநினை அன்றி எங்கணும்

பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்

வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்

மெய்ய னேதிருத் தணிகை வேலனே.

3. வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்

மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்

சால நின்றவன் தணிகை நாயகன்

வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.

4. நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி

வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை

தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்

கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.

5. கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்

படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்

தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்

தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.

6. செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்

கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே

தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்

பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.

7. என்னை என்னைஈ தென்றன் மாதவம்

முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்

பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை

அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.

8. அண்ணி லேன்நினை ஐய நின்அடி

எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன்

புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால்

தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே.

9. அப்பன் என்னுடை அன்னை தேசிகன்

செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்

துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்

தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.

10. வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்

உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்

எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்

தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.


11. வெற்ப னேதிருத் தணிகை வேலனே

பொற்ப னேதிருப் போரி நாதனே

கற்ப மேல்பல காலம் செல்லுமால்

அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.

12. சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்

ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்

டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்

ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.

13. முற்று மோமனம் முன்னி நின்பதம்

பற்று மோவினைப் பகுதி என்பவை

வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ

சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.

14. அத்த னேதணி காச லத்தருள்

வித்த னேமயில் மேற்கொள் வேலனே

பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்

சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.

15. ஏதி லார்என எண்ணிக் கைவிடில்

நீதி யோஎனை நிலைக்க வைத்தவா

சாதி வான்பொழில் தணிகை நாதனே

ஈதி நின்அருள் என்னும் பிச்சையே.

16. பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்

இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்

பச்சை மாமயில் பரம நாதனே

கச்சி நேர்தணி கைக்க டம்பனே.

17. கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே

தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே

இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்

தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.

18. பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்

இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்

பச்சை மாமயில் பரம நாதனே

கச்சி நேர்தணி கைக்க டம்பனே.

19. கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே

தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே

இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்

தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.

20. என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்

வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்

தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்

தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.

21. தேவ நேசனே சிறக்கும் ஈசனே

பாவ நாசனே பரம தேசனே

சாவ காசனே தணிகை வாசனே

கோவ பாசனே குறிக்கொள் என்னையே.

22. குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்

வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ

முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ

நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.

23. தணிகை மேவிய சாமி யேநினை

எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்

அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்

கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.

24. உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்

நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே

தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த

வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.

25. செய்வ தன்றவன் சிறிய னேன்றனை

வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்

உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே

சைவ நாதனே தணிகை மன்னனே.

26. மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே

இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்

பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே

தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.

27. மேலை வானவர் வேண்டும் நின்திருக்

காலை என்சிரம் களிக்க வைப்பையோ

சாலை ஓங்கிய தணிகை வெற்பனே

வேலை ஏந்துகை விமல நாதனே.

28. வேத மாமுடி விளங்கும் நின்திருப்

பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்

கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்

சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.

29. நேயம் நின்புடை நின்றி டாதஎன்

மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ

பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்

தாய நின்கடன் தணிகை வாணனே.

30. வாணு தல்பெரு மாட்டி மாரொடு

காணு தற்குனைக் காதல் கொண்டனன்

ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ

மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.

31. வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு

கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே

தண்ண னேர்திருத் தணிகை வேலனே

திண்ணம் ஈதருள் செய்யும் காலமே.

32. கால்கு றித்தஎன் கருத்து முற்றியே

சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்

மால்ப கைப்பிணி மாறி ஓடவே

மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.

அகத்தியர் சதகம்

 ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !

ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி !

அகத்தியர் சதகம்



தேவரீர் திருவடிக்கு ஆளாகவும்

அட்டமா சித்தி தந்து அருள்புரியவும்
சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும்
சித்தம் வைத்து அருள் புரியவும்
பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம்
பறந்தோட அருள் புரியவும்
பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப்
பண்ணி வைத்து அருள் புரியவும்
நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தோடு
நடனமிட அருள் புரியவும்
நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள்
நழுவிடாது அருள் புரியவும்
மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.

-மகான் மஸ்தான் சாகிப் 

அகத்தியர் சதகம்

 ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !

ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி !

அகத்தியர் சதகம்






திக்கற்ற பாவியைப் பக்கத்தில் வைத்துரட்
சித்துநல் லருள் புரியவுந்
திருவுளம் இரங்கி நின்றிருவடி யளித்துத்
தினந்தினம் மருள் புரியவுந்
கைக்குள் வளர் நெல்லிக்கனிக்கு நிகராகக்
கடாட்சித்து னருள் புரியவுந்
கன்மம் தொலைத்தே கடைத்தேற்றி வைத்துநற்
கதிதந்து னருள் புரியவுந்
துக்க கடற்கடந் தக்கரைப் படவெனைத்
தூக்கிவிட் டருள் புரியவுந்
துன்பங்க ளெல்லாந் தொலைத்தடிமை யுன்பதந்
தொழுதிடற் கருள் புரியவும்
வைக்குமனம் வைத்து மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.

-மகான் மஸ்தான் சாகிப்

Wednesday, 9 June 2021

உலக மக்கள் உய்வதற்கு ஒரு உபாயம்!

 

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்

 

மகான் கொங்கண மகரிஷி உலக மக்கள்பால் கருணை கொண்டு அருளிய அமுத கவியாகும்;.

 


சீசனாம் எனத்தேர்ந்தால் மௌனம்சொல்வார்

சிற்றெறும்பு ஊறையிலே கற்குழிந்தாப்போலே

பாசமங்கே வைக்கவைக்கப் பாவமெல்லாம்

பர்வதம்போல் பஞ்சுவைத்து அணுவளவுதீயை

நேசமுடன் வைத்தகதை போலேயாச்சு

நிலைத்துநின்ற குருவுக்கு மனங்கோணலாகா

வேசைமனம் போலாகி அலையாதேநீ

வேதாந்த குருபதத்தை மேவுமேவே.

-மகான் கொங்கண மகரிஷி அருளிய கடைக்காண்டம் கவி 270.


மேற்கண்ட அருட்கவியின் சாரம்


ஞானிகளிடத்தில் பக்தி செலுத்தசெலுத்த நாம் பல ஜென்மங்களிலும், இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களெல்லாம் பெரியமலைபோன்ற பஞ்சில் அணுவளவு தீயை வைத்ததுபோல் நமது பாவங்களெல்லாம் சாம்பலாகிவிடும். எனவே சலிப்பில்லாமல் பூஜை செய்து வந்தால் இல்லறமும் சிறக்கும். ஞானமும் கைகூடும்.

 

இந்த பாடலை பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் எரிமலை, நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு, நிலச்சரிவு, கடும்வறட்சி, கொடுமையான வெயில், சூறாவளி, பெரும் வெள்ள சேதம், அதிகமழை, இடி, மின்னல், அதிக பனி, விண்கற்கள் விழுதல், கடல் அரிப்பு, கொடிய நோய்கள், தீ பரவுதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் நடைபெறாது. மேற்கண்ட பாடல் புனிதமான வேதமாகும். இதை தொட்டு வணங்குவதே பூஜையாகும். இந்த பாடலை யாரெல்லாம் பக்தியுடன் படிக்கிறார்களோ, அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அவர்களை பார்த்தாலே பாவம் தீரும்.

 

சமுதாயத்தில் ஜீவதயவு குறைந்து வருவதால், எங்கு பார்த்தாலும் இயற்கை சீற்றங்கள் அளவு கடந்து நடக்கிறது. ஜீவதயவு இருந்தால் எல்லாம் வல்ல இயற்கை அன்னை சாந்தமடைந்து நல்வாழ்வு தருவாள்.

 

ஜீவதயவு அல்லது மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் அல்லது ஜீவகாருண்யம் ஆகிய நான்கும் ஒரே பொருளாகும். ஜீவதயவு உண்டாக வேண்டுமென்றால் சாந்தமே வடிவான மகத்துவம் பொருந்திய "அகத்திய முனிவர்", சிந்தையில் நிலைத்திடும் "ஆசான் நந்தீசர்", திக்கெல்லாம் புகழ் வாய்ந்த "மகான் திருமூலதேவர்", அருள் கருவுருவாய் வந்த "மகான் கருவூர் முனிவர்", அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய "மகான் இராமலிங்க சுவாமிகள்" ஆகிய ஐந்து மகான்களும் ஜீவகாருண்ய தலைவர்கள் ஆவார்கள். அவர்கள் நாமத்தைச் சொல்லி காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும் நாமஜெபம் செய்து வந்தால் நமக்கு ஜீவகாருண்ய உணர்வு வரும். ஜீவகாருண்யம் இல்லாதவர்களுக்குத்தான் மூர்க்கத்தனமும், பொல்லாத வறுமையும், கொடிய நோயும், அடிக்கடி விபத்தும் நடக்கும். மேலும் புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற குணக்கேடுகளும் பற்றிக்கொள்கின்றன.

  

மேற்கண்ட மகான்களை பூஜை செய்வதால் சிறந்த குணப்பண்பு உண்டாகும், தன்னையும் அறியலாம், தலைவனையும் அறியலாம். தலைவனை அறிந்த மக்கள்தான் பேதைமையை உண்டுபண்ணும் மும்மலமாகிய காமதேகத்தைபற்றி அறிந்துகொள்ளமுடியும்;. காததேகத்தின் சீற்றத்தை தணித்து கொண்டாலே நாமும் கடவுளாகலாம். மேலும் பொல்லாத வறுமைத் தீரும், செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பண்புள்ள புத்திரபாக்கியம் தோன்றும், நோயில்லா வாழ்வும், நீடிய ஆயுளும் உண்டாகும். நம்மிடம் தீயபழக்கவழக்கங்கள் இருந்தாலும் நீங்கிவிடும். தீயநட்பு நீங்கி தகுதியுள்ள நட்பு அமையும். புலால் உண்ணுதல், மது அருந்துதல் போன்ற குணக்கேடுகள் நம்மைவிட்டு நீங்கிவிடும்.

  

சாந்தமே வடிவான ஞானியர்களின் அருளை பெறவிரும்புகிறவர்கள், நித்தியம் மேற்கண்ட பாடலை பயபக்தியோடு படித்தும், மேற்கண்ட ஐந்து மகான்களின் நாமத்தைச்சொல்லி பூஜை செய்தும் வந்தால் முன்செய்த பாவங்கள் தீரும். சிறப்பறிவு னண்டாகும். மேலும் விவசாயம், வியாபாரம், உத்தியோகம், தொழில், கல்வி ஆகிய அனைத்தும் நல்லபடி நடக்கும், இல்லறமும் சிறக்கும், ஞானமும் கைகூடும், மரணமில்லா பெருவாழ்வு கைகூடும்.