Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Thursday, 10 October 2019

“ஓம் முருகா” என்ற பெரு மந்திரம்

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....

வினைவென்ற வேலன் திருவடி விரும்பியே பூசிக்க
துணையென்றே போற்றுவார் துறவோர்.


தேவர்களை தனித்தனியே பூஜை செய்து ஆசி பெறலாம், முப்பத்து முக்கோடி தேவர்களை பூசித்து ஆசி பெறலாம், நவகோடி சித்தரிஷி கணங்களையும் தனித்தனியாகவோ ஒன்றாகவோ பூஜித்து ஆசி பெறலாம், அஷ்டதிக்கு பாலகர்களை தனித்தனியே பூஜித்து ஆசி பெறலாம், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களையும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ பூஜித்தும் ஆசி பெறலாம், ரிஷிகளின் ரிஷி பத்தினிகளையும் பூஜித்தும் ஆசி பெறலாம். பதினான்கு லட்சம் தேவதைகளையும் தனித்தனியே பூஜித்து ஆசியும் பெறலாம், நவக்கிரக நாயகர்களையும் பூஜித்து ஆசி பெறலாம், மற்றுமுள்ள அநேகம் அநேகம் உள்ள சக்தர்களையும், சக்திகளையும் பூஜித்து ஆசி பெறலாம்.

இவர்களையெல்லாம் பூஜித்து பூஜித்து ஆசி பெற யுகயுகமாய் பூஜித்து ஆசி பெற்றாலும் நமது பூஜை ஒரு முடிவிற்கு மேல் முடிவிற்கு வராது.

அப்படியே பூஜித்து ஆசி பெற்றிட்டாலும் அந்தந்த தெய்வங்களின் சக்திக்கேற்ப சிறிய சிறிய சத்திகளையே பெற முடியும் என்றும், அப்படி பெற்ற சிற்சக்திகளோ, யோக ஞான இரகசியங்களோ நமக்கு முற்றும் நிலையான சித்தியை தராது என்பதையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், நவகோடி சித்தரிஷி கணங்களையும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிமார்களையும், ரிஷி பத்தினிகளையும், பதினான்கு லட்சம் தேவதைகளையும், அஷ்டதிக்கு பாலகர்களையும், நவக்கிரக நாயகர்களையும் மற்றும் உள்ள சக்தர்களையும் சக்திகளையும் ஒன்றாய் பூசித்து பலனை தரவல்ல மந்திரம் ஒன்று உள்ளது.

அந்த மந்திரமே இந்த சக்திகளையெல்லாம் தோற்றுவித்த மூலவனாம் ஞானத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் தலைவனாய் விளங்கி சதகோடி சூர்ய பிரகாசமும், பொன்னிறமும் உடையவனும் தயவே வடிவானவனும், கேட்டோர்க்கு இல்லையென்னாது வழங்குகின்ற வள்ளலுமான முருகப்பெருமானின் திருமந்திரமான “ஓம் முருகா” என்ற பெரு மந்திரமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முருகா என்று மனமுருகி அழைத்தால் அக்கணமே முருகனால் உருவாக்கப்பட்ட இந்த அத்துணை சக்திகளும் “யார் அழைத்தது எம் தலைவனை” என்றே உடன் விரைந்து முருகப்பெருமான் தோன்று முன்னரே அத்துணை சக்திகளும் அழைத்தவர் முன் தோன்றி அழைத்த அந்த அன்பர் குறை தீர்க்கும்.

அத்தகைய வல்லமை மிக்க முருகப்பெருமானின் நாமங்களை சொல்லி முருகனை அழைக்கும் வாய்ப்பு உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு, ஜீவதயவு பெருகி, எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணுகின்ற, பேதா பேதமற்ற புண்ணியவான்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்பதையும் அறியலாம்.

ஒரு நொடிப் பொழுதில் அநேகம் அநேகம் கோடி சக்திகளை முருகனின் நாமங்களை அவனது திருவடி பற்றி மனமுருகி சொல்லி சொல்லி பெறலாம் என்பதை அறியலாம்.

வேதாந்த வித்தகன் விமலனாம் முருகனின்
பாதார விந்தம் பணிதலே பண்பாகும்.

No comments:

Post a Comment